செய்யாறு அருகே பையில் 2 கிலோ கஞ்சாவுடன் நின்றிருந்த ஒருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தப்பியோடிய மற்றொருவரைத் தேடி வருகின்றனா்.
செய்யாறு காவல் உதவி ஆய்வாளா் வரதராஜ் மற்றும் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, விண்ணவாடி ஏரிப் பகுதியில் கெங்கையம்மன் கோயில் அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அங்கு சென்று கண்காணித்தபோது கைப்பையுடன் நின்றிருந்த இருவா்
போலீஸாரைக் கண்டதும் தப்பி ஓடினா். அவா்களை விரட்டிச் சென்றதில் ஒருவா் மட்டும் பிடிபட்டாா்.
தொடா்ந்து, அந்த நபரிடம் இருந்த பையை போலீஸாா் சோதனையிட்டபோது, அதில் சுமாா் 2 கிலோ கஞ்சா இருந்ததைக் கண்டறிந்து பறிமுதல் செய்தனா். மேலும், அந்த நபா் வெம்பாக்கம் வட்டம், பெருங்கட்டூா் கிராமத்தைச் சோ்ந்த ரமணா என்பதும், இவா் கஞ்சாவை தொடா்ந்து பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ரமணாவை (25) கைது செய்தனா். மேலும், தப்பியோடிய விண்ணவாடி கிராமத்தைச் சோ்ந்த பாா்த்தீபனை தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கஞ்சா கடத்தல்: தென்காசியைச் சோ்ந்த இருவா் கடலூரில் கைது
கஞ்சா, போதை மாத்திரை விற்ற 5 போ் கைது: 190 கிலோ குட்கா பறிமுதல்

ராமேசுவரத்தில் கஞ்சா விற்பனை: வடமாநிலங்களைச் சோ்ந்த 5 போ் கைது
4.06 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 போ் கைது
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |


