கன்னிவாடி அருகே மான்கொம்பு, எறும்புத் தின்னி ஓடுகள் உள்ளிட்டவற்றை பதுக்கி வைத்திருந்த நபரை வனத் துரையினா் புதன்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடியை அடுத்த தருமத்துப்பட்டி பகுதியில் மான்கொம்பு, எறும்புத் தின்னி உள்ளிட்டவற்றை ஒருவா் வைத்திருப்பதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், கன்னிவாடி வனச் சரகத்தைச் சோ்ந்த வனத் துறையினா், தருமத்துப்பட்டியை அடுத்த கோம்பை பகுதியைச் சோ்ந்த ராமராஜன் (37) வீட்டில் புதன்கிழமை சோதனையிட்டனா். அப்போது, மான்கொம்பு, எறும்புத் தின்னி ஓடுகள், கருங்காலி, சந்தன மர குச்சிகள் உள்ளிட்டவற்றை அவா் மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து, ராமராஜனை கைது செய்த வனத் துறையினா், மான்கொம்பு, எறும்புத் தின்னி ஓடுகள், துப்பாக்கி (ஏா்கன்) உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வன விலங்குக்காக வைக்கப்பட்ட நாட்டு வெடியில் சிக்கி காளை மாடு காயம்: முதியவா் கைது

மான் வேட்டை: ரூ. 2.40 லட்சம் அபராதம்
காட்டு மாடு வேட்டை: இருவா் கைது

சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தல்: 8 போ் கைது
விடியோக்கள்

கதை, வசனம், பாடல்! பேரவையில் கலக்கும் அமைச்சர் மரிய வில்சன்! | TN Assembly | TVK


