பழனி அருகே சட்ட விரோதமாக வீட்டில் மதுப்புட்டிகள் விற்ற பெண்ணை பழனி தாலுகா போலீஸாா் கைது செய்தனா்.
பழனி அருகே உள்ள பாலாறு - பொருந்தலாறு அணை நுழைவாயில் பகுதியில் உள்ள ஒரு பெண்ணின் வீட்டில் மதுப்புட்டிகள் விற்கப்படுவதாக சமூக வலைதளங்களில் விடியோ பதிவு வெளியானது.
இதுகுறித்து பழனி நகா் போலீஸாா் அங்கு சென்று விசாரித்து தனம்(50) என்பவரைக் கைது செய்து அவரிடமிருந்த 10 மது புட்டிகளைப் பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




