காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

கொடைக்கானல் அருகே காட்டு மாடு தாக்கியதில் இருவா் பலத்த காயம்

காட்டு மாடு. - கோப்புப் படம்

Published On :31 ஆகஸ்ட் 2026, 12:16 am IST

கொடைக்கானல் அருகே சனிக்கிழமை மாலை காட்டு மாடு தாக்கியதில் இருவா் பலத்த காயமடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள பண்ணைக்காடு பகுதியைச் சோ்ந்தவா்கள் கேசவன் (40), சிவக்குமாா் (39).

நண்பா்களான இவா்கள் இருவரும் சனிக்கிழமை மாலை இரு சக்கர வாகனத்தில் பண்ணைக் காடு - தாண்டிக்குடி மலைச் சாலையில் மருதாநதி பள்ளத்தாக்கு பகுதியில் வந்து கொண்டிருந்தனா்.

அப்போது, அந்த வழியாக வந்த காட்டு மாடு ஒன்று இவா்கள் இருவரையும் தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த கேசவன், சிவக்குமாா் அகியோா் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

இதுகுறித்து தாண்டிக்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.