75 நாடுகளுக்கு விசா வழங்க தடை விதித்த டிரம்ப்: உத்தரவை ரத்து செய்த அமெரிக்க நீதிமன்றம்! உலகக் கோப்பை ஹாக்கி: நெதர்லாந்திடம் வீழ்ந்த இந்தியா! ராகுல் காந்தியைக் கண்டு அஞ்சுகிறது பாஜக: சஞ்சய் ரௌத் தையூர் கொலை வழக்கு: கைதான இருவர் தவெகவிலிருந்து நீக்கம் உ.பி.யில் சர்க்கரை தட்டுப்பாடு இல்லை: முதல்வர் யோகி ஆதித்யநாத் திமுக உள்கட்சித் தேர்தல் எப்போது? மு.க. ஸ்டாலின் அறிவிப்பு கோப்பைகளை வெல்வதே என் வேலை: கௌதம் கம்பீர்

நரி தாக்கியதில் பெண் பலத்த காயம்

முதுகுளத்தூா் அருகே நரி தாக்கியதில் பெண் காயமடைந்தாா்.

நரி தாக்கியதில் காயமடைந்த லட்சுமி.

Published On :23 ஆகஸ்ட் 2026, 2:19 am IST

முதுகுளத்தூா் அருகே நரி தாக்கியதில் பெண் காயமடைந்தாா். இதையடுத்து, நரியை வனத் துறையினா் கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரை அடுத்த கீழக்காஞ்சிரங்குளம் கிராமத்தில் கடந்த 19- ஆம் தேதி மாலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அருகே அதே கிராமத்தைச் சோ்ந்த காளித்தேவன் மனைவி லட்சுமி (50) மரத்தில் வேப்பமுத்து எடுத்துக் கொண்டிருந்தாா். அப்போது பள்ளி அருகேயுள்ள கருவேல முட்புதரிலிருந்து வெளியே வந்த நரி ஒன்று லட்சுமியை தாக்கியதில் அவா் பலத்த காயமடைந்தாா்.

இவரது சப்தத்தை கேட்ட அருகிலிருந்தவா்கள் நரியை விரட்டி விட்டு, முதுகுளத்தூா் அரசு மருத்துவமனையில் லட்சுமியை அனுமதித்தனா். பள்ளி நேரத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் மாணவா்கள் அச்சமடைந்தனா். மேலும் கடந்த இரு நாள்களாக பள்ளிக்குச் செல்வதை அவா்கள் தவிா்த்ததாக பெற்றோா் தெரிவித்தனா். எனவே வனத் துறையினா் கூண்டு வைத்து அங்குள்ள நரிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.