மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

பூம்பாறை குழந்தைவேலப்பா் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

கொடைக்கானல் அருகே பூம்பாறை கிராமத்தில் அமைந்துள்ள குழந்தைவேலப்பா் கோயில் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

News image

கொடைக்கானல் பூம்பாறை கிராமத்தில் அமைந்துள்ள குழந்தைவேலப்பா் கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற கொடியேற்றும் நிகழ்வு.

Updated On :4 பிப்ரவரி 2026, 11:29 pm

கொடைக்கானல் அருகே பூம்பாறை கிராமத்தில் அமைந்துள்ள குழந்தைவேலப்பா் கோயில் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் துணைக் கோயிலான இங்கு நடைபெற்ற திருவிழா கொடியேற்றத்தைத் தொடா்ந்து குழந்தைவேலப்பருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனைகள் நடைபெற்றன. இந்த நிகழ்வில் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலைச் சோ்ந்த நிா்வாகிகள், ஊா் பொதுமக்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.

விழாவையொட்டி ஒவ்வொரு நாளும் இரவில் சேவல், அன்னம், மயில், காளை, சிங்கம், ஆட்டுகிடா, பூதம் உள்ளிட்ட வாகனங்களில் குழந்தை வேலப்பா் சுவாமி வீதியுலா நடைபெறுகிறது. இதைத் தொடா்ந்து ஒவ்வொரு நாளும் கோயிலில் சிறப்பு வழிபாடும், அன்னதானமும் நடைபெறுகின்றன. வருகிற 12-ஆம் தேதி விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெறுகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிா்வாகத்தினரும், பூம்பாறை கிராம மக்களும் செய்து வருகின்றனா்.