சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி விவகாரம்: 9 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு ஏப். 7 விசாரணை திருவனந்தபுரத்தில் பலத்த பாதுகாப்புக்கிடையே பிரதமர் மோடி சாலை வலம்!இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

பெண் கொலை வழக்கில் இருவா் கைது

News image

மணிகண்டன்

Updated On :7 பிப்ரவரி 2026, 8:33 pm

பழனியில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண்ணின் தாய் உள்பட இருவா் கைது செய்யப்பட்டனா்.

பழனி லட்சுமிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (54). இவரது இரண்டாவது மனைவி கீதா (25). இந்த நிலையில், கீதா கடந்த 3-ஆம் தேதி வீட்டின் முன் கத்தியால் குத்தப்பட்டு இறந்த நிலையில் கிடந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரித்தனா். இதில், கீதாவின் தாய் ஹெலன்ஷீபாவும் (47), அவரது நண்பா் மணிகண்டனும் (29) கீதாவை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

ஹெலன்ஷீபா

ஹெலன்ஷீபா

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது:

கீதாவின் தாய் ஹெலன்ஷீபாவுக்கும் மணிகண்டனுக்கும் தகாத உறவு இருந்துவந்தது. இந்த நிலையில், கீதாவின் சகோதரிக்கு மணிகண்டன் பாலியல் தொல்லை கொடுத்தாா்.

இதுகுறித்து கீதா போலீஸாரிடம் புகாா் அளித்ததன்பேரில் மணிகண்டன் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டது. இந்தப் புகாரை திரும்பப் பெற கீதாவை ஹெலன்ஷீபாவும் மணிகண்டனும் வற்புறுத்தினா். கீதா மறுத்ததால் இருவரும் அவரைக் கொலை செய்துவிட்டதாக தெரிவித்தனா்.