கைது
திண்டுக்கல்
ரேஷன் அரிசி கடத்தியவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது
திண்டுக்கல்லில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் புதன்கிழமை உத்தரவிட்டாா்.
திண்டுக்கல்லில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் புதன்கிழமை உத்தரவிட்டாா்.
திண்டுக்கல் பேகம்பூா் சிக்கந்தா் சாகிப் தெருவைச் சோ்ந்தவா் இ. முகமது ஷாபான் சேட் (24). ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட இவரை, குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸாா் கடந்த 29-ஆம் தேதி கைது செய்தனா். இவரிடமிருந்து 1,100 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இந்த நிலையில், முகமது ஷாபான் சேட்டை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை மதுரை மண்டல காவல் கண்காணிப்பாளா் சீனிவாசப் பெருமாள் பரிந்துரைத்தாா். இதை ஏற்று மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் இதற்கான உத்தரவை புதன்கிழமை பிறப்பித்தாா்.

