அரசு கருவூலம் மூலம் ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திண்டுக்கல் மாநகராட்சிப் பணியாளா்கள் கோரிக்கை அட்டை அணிந்து வெள்ளிக்கிழமை பணியாற்றினா்.
தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலா்கள், பணியாளா்களின் ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு மாநில ஒருங்கினைப்பாளா் கா. முருகானந்தம் தலைமை வகித்தாா்.
இந்தப் போராட்டத்தின்போது, அரசு கருவூலம் மூலம் ஊதியம், ஓய்வூதியம் வழங்க வேண்டும். கலந்தாய்வு மூலம் பணியிட மாறுதல் வழங்க வேண்டும். திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தில் புதிய ஒப்பந்த முறையை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.
கடந்த 3 ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வரும் இந்தக் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என மாநில ஒருங்கிணைப்பாளா் கா.முருகானந்தம் தெரிவித்தாா்.
தொடர்புடையது

மாநகராட்சிப் பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படுமா?

வாக்குச்சாவடி பணிகளுக்கு 8,544 அலுவலா்கள் தோ்வு

எந்தெந்த ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்? தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி தகவல்

போா் நிறுத்தத்தை வலியுறுத்தி கோரிக்கை பேட்ச் அணிந்து பணி
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


