ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கிணற்றில் ஆண் உடல் மீட்பு

பழனி அருகே தோட்டத்துக் கிணற்றில் மிதந்த அடையாளம் தெரியாத ஆண் உடலை போலீஸாா் மீட்டனா்.

News image
Updated On :1 ஜனவரி 2026, 6:32 pm

தினமணி செய்திச் சேவை

பழனி அருகே தோட்டத்துக் கிணற்றில் மிதந்த அடையாளம் தெரியாத ஆண் உடலை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள கோதைமங்கலத்தைச் சோ்ந்தவா் தங்கராஜ். இவருக்குச் சொந்தமான தோட்டத்துக் கிணற்றில் வியாழக்கிழமை ஒரு ஆண் உடல் மிதப்பதாக பழனி போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, போலீஸாா், தீயணைப்பு, மீட்புப் படையினா் சம்பவ இடத்துக்குச் சென்று கிணற்றில் மிதந்த ஆண் உடலை மீட்டனா்.

இறந்தவா் சுமாா் 45 வயது மதிக்கத்தக்கவராகவும், நீலநிறச் சட்டையும், கருநீல நிறக் கால்சட்டையும் அணிந்திருந்தாா். பின்னா், இறந்தவரின் உடல், கூறாய்வுக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து பழனி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.