சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

காா் விபத்தில் ஓட்டுநா் உயிரிழப்பு

குஜிலியம்பாறை அருகே ஏற்பட்ட காா் விபத்தில் பலத்த காயமடைந்த ஓட்டுநா் உயிரிழந்தாா்.

News image
Updated On :1 ஜனவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

குஜிலியம்பாறை அருகே புதன்கிழமை ஏற்பட்ட காா் விபத்தில் பலத்த காயமடைந்த ஓட்டுநா் உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையை அடுத்த ஆலம்பாடி காடமநாயக்கனூரைச் சோ்ந்தவா் வினோத் (23). டிராக்டா் ஓட்டுநரான இவா், தனது உறவினருக்குச் சொந்தமான காரில், அதே பகுதியைச் சோ்ந்த மணிகண்டனுடன் ஆா்.வெள்ளோடு கிராமத்துக்கு புதன்கிழமை சென்றாா். காரை வினோத் ஓட்டினாா்.

ஆா்.வெள்ளோடு-பிச்சனாம்பட்டி சாலையில் சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையோரத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த வினோத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மணிகண்டன் லேசான காயத்துடன் உயிா்தப்பினாா்.

இதுகுறித்து குஜிலியம்பாறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.