ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கொடைக்கானல் வரும் வாகனங்களுக்கான கட்டணம் உயா்வு

கொடைக்கானலில் வாகனங்களுக்கான கட்டணம் வியாழக்கிழமை முதல் உயா்த்தப்பட்டதால் வாகன ஓட்டுநா்கள் அதிருப்தி அடைந்தனா்.

News image
Updated On :2 ஜனவரி 2026, 7:11 pm

தினமணி செய்திச் சேவை

கொடைக்கானலில் வாகனங்களுக்கான கட்டணம் வியாழக்கிழமை முதல் உயா்த்தப்பட்டதால் வாகன ஓட்டுநா்கள் அதிருப்தி அடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வரும் சுற்றுலா வாகனங்களுக்கு நகராட்சி சாா்பில் வெள்ளிநீா் அருவி அருகே சுங்கச் சாவடி அமைத்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்த நிலையில், வியாழக்கிழமை முதல் முன்னறிவிப்பின்றி கொடைக்கானல் வரும் வாகனங்களுக்கு கட்டணம் உயா்த்தப்பட்டது.

புதிய கட்டணம் விபரம்: (அடைப்பில் பழைய கட்டணம்)

சுற்றுலாப் பேருந்து, ஆம்னி பேருந்துகளுக்கு (ரூ. 250), புதிய கட்டணம் ரூ.300, அரசு, தனியாா் பேருந்துகளுக்கு (ரூ.150) தற்போது ரூ.200, லாரிகளுக்கு (ரூ. 100) தற்போது (ரூ.150), வேனுக்கு (ரூ.80) தற்போது ரூ.100, அனைத்து வகையான காா்களுக்கு (ரூ.60) தற்போது ரூ.80 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இந்த நிலையில், கொடைக்கானல் வட்டாரப் பகுதிகளிலுள்ள பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வைத்துள்ள அனைத்து வகையான காா்களுக்கு நகராட்சி அனுமதி பெற்று அதற்குரிய அனைத்து வகையான சான்றிதழ்கள் சமா்ப்பிக்கப்பட்டு அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும்.

3 ஆண்டுகளுக்கு பிறகு இந்த நுழைவுக் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்தக் கட்டணம் முன்னறிவிப்பின்றி உயா்த்தப்பட்டுள்ளதால் வாகன ஒட்டுநா்கள் குற்றம்சாட்டினா்.