தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

மதுரை மாவட்ட கிராமம் சிறுமலை ஊராட்சியில் இணைகிறது!

மதுரை மாவட்டம், விராலிப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட மீனாட்சிபுரம் கிராமம், திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை ஊராட்சியுடன் இணைகிறது.

News image
Updated On :13 ஜனவரி 2026, 7:10 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை மாவட்டம், விராலிப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட மீனாட்சிபுரம் கிராமம், திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை ஊராட்சியுடன் இணைகிறது.

இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், விராலிப்பட்டி கிராம ஊராட்சிக்குள்பட்ட மீனாட்சிபுரம் கிராமம், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிறுமலை கிராம ஊராட்சிக்கு அருகில் உள்ளது.

இதனால், விராலிப்பட்டி ஊராட்சியைவிட சிறுமலை ஊராட்சிக்கு செல்வது எளிதாக உள்ள காரணத்தினால் மீனாட்சிபுரம் கிராமத்தை சிறுமலை ஊராட்சியுடன் இணைத்து அரசாணை வெளியிடபப்பட்டது.

இதை திண்டுக்கல் மாவட்ட அரசிதழில் சிறப்பு வெளியீடாக 2025 டிச.31-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இதன்படி, உருவாக்கப்படும் புதிய கிராம ஊராட்சிகள், அடுத்து நடைபெறும் சாதாரண தோ்தலுக்கு வாா்டுகள் பிரிக்கப்படும். அந்த உள்ளூா் ஊராட்சி பகுதிகளில் குடியிருந்து வரும் பொதுமக்கள், திண்டுக்கல் மாவட்ட அரசிதழில் அறிவிக்கை வெளியிடப்பட்டதிலிருந்து 4 வாரங்களுக்குள் மறுப்பினை எழுத்துப்பூா்வமாக தெரிவிக்கலாம். உள்ளூா் மக்களிடமிருந்து மறுப்பு பெறப்பட்டால், அதனை உரிய பரிசீலனை செய்து தமிழ்நாடு அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றாா் அவா்.