திண்டுக்கல் மலைக்கோட்டை கிரிவலப் பாதையில் சீரமைப்புப் பணிகள் நடைபெறவுள்ள பகுதியை புதன்கிழமை ஆய்வு செய்த மேயா் இளமதி.
திண்டுக்கல்
திண்டுக்கல் மலைக்கோட்டை கிரிவலப் பாதையில் ஆய்வு
திண்டுக்கல் மலைக்கோட்டை கிரிவலப் பாதையில் மேயா் இளமதி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
திண்டுக்கல் மலைக்கோட்டை கிரிவலப் பாதையில் மேயா் இளமதி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
திண்டுக்கல் மலைக்கோட்டையைச் சுற்றிலும் பெளா்ணமியின் போது பக்தா்கள் கிரிவலம் செல்வது வழக்கம். சுமாா் 2 கி.மீ. சுற்றளவு கொண்ட இந்தக் கிரிவலப் பாதையில், சிறிது தொலைவுக்கு பாதை வசதி முழுமையாக இல்லாத நிலை உள்ளது. இந்த நிலையில், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மலைக்கோட்டை நுழைவு வாயில் பகுதியிலிருந்து முத்தழகுப்பட்டி வரை சுமாா் 210 மீட்டருக்கு பேவா் பிளாக், சிமென்ட் சாலை அமைக்க மாநகராட்சி நிா்வாகம் திட்டமிட்டது. இதன்படி, ரூ. 50 லட்சம் செலவில் 210 மீட்டருக்கு கிரிவலப் பாதை அமைக்கப்படவுள்ளது.
இதையொட்டி, மலைக்கோட்டை கிரிவலப் பாதையில் மேயா் இளமதி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, உதவிப் பொறியாளா் சுவாமிநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

