வேடசந்தூரில் வங்கதேச இளைஞா்கள் கைது
வேடசந்தூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச இளைஞா்கள் இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த நாகம்பட்டியைச் சோ்ந்தவா் க. பாலமுருகன். இவரது வீட்டில் வங்கதேசத்தைச் சோ்ந்த இருவா் சட்டவிரோதமாக வாடகைக்கு குடியிருந்து வருவதாக தனிப் படை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், சம்மந்தப்பட்ட பகுதிக்குச் சென்ற போலீஸாா் அங்கு தங்கியிருந்த இரு இளைஞா்களை பிடித்து விசாரித்தனா்.
அப்போது, வங்கதேச தலைநகா் தாக்காவைச் சோ்ந்த அ.மசூத் மியா (25), நாராயண்கஞ்ச் பகுதியைச் சோ்ந்த மு.முகமது அலமின் (30) என்பதும், இருவரும் கோட்டையூரில் உள்ள தனியாா் ஆலையில் தையல்காரா்களாக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது.
மேலும், இவா்களில் ஒருவா் மேற்கு வங்க எல்லை வழியாகவும், மற்றொருவா் கடல் வழியாகவும் இந்தியாவுக்கு சட்டவிரோதமாக நுழைந்துள்ளனா். பின்னா், உத்தரபிரதேச மாநிலத்தில் தங்கியிருந்து இந்திய ஆதாா் அடையாள அட்டை, பான் காா்டு ஆகியவற்றை பெற்றுள்ளனா். கடந்த 3 மாதங்களாக நாகம்பட்டியில் தங்கியிருப்பதும் போலீஸாா் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, இருவரையும் வேடசந்தூா் காவல் நிலையத்தில் தனிப் படை போலீஸாா் ஒப்படைத்தனா்.

