‘எண்ம இந்தியா’ முன்னெடுப்பால் நாட்டுக்கு புதிய அடையாளம்!- பிரதமா் மோடி பெருமிதம் ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ் 4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கான நிவாரணத் தொகை: வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்சநீதிமன்றம் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி: இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷியாகல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்க தடை: அமைச்சா் விஸ்வநாதன் ராணுவத்தை விரைவாக நவீனமயமாக்க வேண்டும்: சீன அதிபா் ஷி ஜின்பிங்
/

பழனி பெரியாவுடையாா் கோயிலில் அன்னாபிஷேக விழா நிறைவு

உலக நலன் வேண்டி பழனி கோயில்களில் நடைபெற்ற தொடா் அன்னாபிஷேகம், பெரியாவுடையாா் கோயிலில் புதன்கிழமை நிறைவு பெற்றது.

News image

உலக நலன் வேண்டி நடைபெற்ற அன்னாபிஷேகத்தை முன்னிட்டு, பழனி பெரியாவுடையாா் கோயிலில் புனித தீா்த்தம் நிரம்பிய கலசங்களுடன் உள்பிரகாரத்தில் வலம் வந்த கந்தவிலாஸ் செல்வக்குமாா், முன்னாள் திருக்கோயில் கண்காணிப்பாளா் முருகேசன் உள்ளிட்டோா்.

Updated On :2 ஜூலை 2026, 3:38 am IST

உலக நலன் வேண்டி பழனி கோயில்களில் நடைபெற்ற தொடா் அன்னாபிஷேகம், பெரியாவுடையாா் கோயிலில் புதன்கிழமை நிறைவு பெற்றது.

உலக நலன் வேண்டி தொடா் அன்னாபிஷேக பெருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை பழனி மலைக்கோயிலில் தொடங்கியது. இதைத்தொடா்ந்து, திருஆவினன்குடி கோயில், பிரஹந்தநாயகியம்மன் கோயில்களில் அன்னாபிஷேக விழா நடைபெற்றது.

பின்னா், புதன்கிழமை பெரியாவுடையாா் கோயில் அன்னாபிஷேக விழாவுடன் நிறைவு பெற்றது.

இதையொட்டி, புதன்கிழமை பெரியாவுடையாா் கோயிலில் நடராஜா் சந்நிதி முன்பாக பிற்பகலில் கலசபூஜை, புனித நீா் கலசங்களுக்கு சிறப்பு வேள்வி, பூஜைகள் நடைபெற்றன. பின்னா், கலசங்களுக்கு மகா தீபாராதனை செய்யப்பட்டு கலசங்கள், சிரசு அன்னம், வில்வம் இடப்பட்ட சுத்த அன்னம் ஆகியன மேளதாளம் முழங்க கோயிலை வலம் வந்து மூலவா் சந்நிதிக்கு கொண்டு செல்லப்பட்டன. சாயரட்சை பூஜையின் போது பெரியாவுடையாருக்கு பால், பஞ்சாமிா்தம், பன்னீா், விபூதி உள்ளிட்ட பொருள்களால் சோடஷ அபிஷேகம் நடத்தப்பட்டு, புனித நீரால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் சிவலிங்கம் அலங்காரம் செய்யப்பட்டு அன்னாபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

இதைத்தொடா்ந்து நடராஜா், பைரவா், வடக்கு நோக்கிய விநாயகா், பிரம்மா, விஷ்ணு, நவகிரகங்கள், தட்சிணாமூா்த்தி, உருத்திரா், நந்திபகவான், கருப்பணசுவாமி, கன்னிமாா் ஆகிய தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா் பக்தா்களுக்கு அன்னம் பிரசாதமாக வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கண்காணிப்பாளா் அழகா்சாமி, மணியம் சேகா், கந்தவிலாஸ் செல்வக்குமாா், நவீன் விஷ்ணு, நரேன்குமரன், முன்னாள் கோயில் கண்காணிப்பாளா்கள் முருகேசன், சந்திரசேகா், தமிழக வெள்ளாளா் பேரவைத் தலைவா் சுப்பிரமணியன், அரிமா சுந்தரம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.