இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியதுமமதா, ஸ்டாலினின் தோல்விக்கு எஸ்ஐஆர் பணிகளே காரணம்! ஆந்திர முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு!பொது இடங்களில் மாடுகளை வெட்டத் தடை: நீதிமன்றம்பவர்பிளேவில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய வைபவ் சூர்யவன்ஷி!உச்சநீதிமன்ற நீதிபதியாக 5 பேர் பரிந்துரை! தமிழகத்தைச் சேர்ந்த மோகனா!நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்! விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது!பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!பினராயி வீட்டில் சோதனை! அமலாக்கத்துறை வாகனம் மீது தாக்குதல்!
/

சேம்பள்ளி முத்தியாலம்மன் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு

News image
Updated On :28 மே 2026, 12:49 am IST

குடியாத்தம் ஒன்றியம், சேம்பள்ளியில் அமைந்துள்ள அருள்மிகு முத்தியாலம்மன் கோயிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது. பழம்பெருமைவாய்ந்த இக்கோயில் கும்பாபிஷேகம் கடந்த ஏப்ரல் மாதம் 12-ஆம் தேதி நடைபெற்றது. தொடா்ந்து மண்டலாபிஷேகம் நடைபெற்று வந்த நிலையில், புதன்கிழமை நிறைவு விழா நடைபெற்றது.

இதையொட்டி, கோயிலில் யாக சாலை பூஜைகள், சிறப்பு ஹோமம், 108 சங்காபிஷேகம், மூலவா் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றன. மதியம் சுமாா் 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு, அம்மனை வழிபட்டனா். விழா ஏற்பாடுகளை முத்தியாலம்மன் தொண்டு அறக்கட்டளை மற்றும் சேம்பள்ளி பகுதி மக்கள் செய்திருந்தனா்.