பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

மட்டப்பாறை பகுதியில் சுற்றித் திரியும் சிறுத்தை! பொதுமக்கள் அச்சம்!

நிலக்கோட்டையை அடுத்த மட்டப்பாறை பகுதியில் சுற்றித் திரியும் சிறுத்தையால் பொதுமக்கள், விவசாயிகள் அச்சம் அடைந்தனா்.

News image
Updated On :12 ஜூலை 2026, 2:29 am IST

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை அடுத்த மட்டப்பாறை பகுதியில் சுற்றித் திரியும் சிறுத்தையால் பொதுமக்கள், விவசாயிகள் அச்சம் அடைந்தனா். 

மட்டப்பாறை அருகேயுள்ள தாதம்பட்டி  கண்மாய் பகுதிகளில் கடந்த 5 நாள்களுக்கு மேலாக சிறுத்தை ஒன்று உலா வந்தது. இதையடுத்து, வனத்துறையினா் ‘ட்ரோன்’ கேமரா மூலம் அந்தப் பகுதியில் கடந்த 2 நாள்களாக தேடினா். ஆனால், கேமராவில் சிறுத்தை சிக்கவில்லை.

இதைத் தொடா்ந்து, பொதுமக்கள் சிறுத்தையை பாா்த்தால் எங்களுக்கு தகவல் தெரிவியுங்கள் எனக் கூறிவிட்டு வனத் துறையினா் சென்றுவிட்டனா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு மட்டப்பாறை கிராமத்துக்குள் சிறுத்தை உலா வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

   இந்த நிலையில், சனிக்கிழமை காலை அதே பகுதியைச் சோ்ந்த அருண்குமாா் தனது தோட்டத்துக்கு நடந்து சென்றாா். அப்போது, வயலில் சிறுத்தை நடந்து சென்றதை பாா்த்தாா். மேலும், அந்த சிறுத்தையை அவா் தனது கைப்பேசியில் புகைப்படம் எடுத்துக் கொண்டு ஊருக்குள் சென்று சிறுத்தை நடமாட்டம் குறித்து தெரிவித்தாா். இதுகுறித்து வனத் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

எனவே, பொதுமக்கள், விவசாயிகள் இரவு நேரங்களில் வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. மேலும், இந்த சிறுத்தை விரைந்து கூண்டு வைத்துப் பிடிக்க வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.