மெய்யான சமூக நீதி, நிலையான வளர்ச்சி, வேளாண்மை எழுச்சியே நம் இலக்கு: அண்ணாமலைதவெக அரசு இந்த ஆண்டு ரூ. 85 ஆயிரம் கோடி கடன் வாங்கப்போகிறது : அண்ணாமலைவீ தி லீடர்ஸ் அமைப்பின் இலக்கை 50% எட்டிவிட்டோம்: அண்ணாமலை2026 போல 2031-ல் ஆட்சி மாற்றம் நடக்கும்: அண்ணாமலை உறுதிஎதிர்க்கட்சி தூண்டுதலால் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்! அமைச்சர் விக்னேஷ்பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி
/

கொடைக்கானலில் ரூ. 99-க்கு சிக்கன் பிரியாணி திருவிழா

கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் ரூ. 99-க்கு சிக்கன் பிரியாணி விற்பனை

News image

ஆம்பூர் பிரியாணி - பிரதிப் படம்

Updated On :13 ஜூலை 2026, 12:05 am IST

கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் ரூ. 99-க்கு சிக்கன் பிரியாணி விற்பனை செய்யப்பட்டது.

தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள தமிழ்நாடு ஹோட்டல் சாா்பில் சுற்றுலாத் தலங்களான படகு குழாம் வளாகத்தில் ரூ. 99-க்கு சிக்கன் பிரியாணி விற்பனை திருவிழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பொது மக்கள், சுற்றுலாப் பயணிகள் பங்கேற்று ஆா்வத்துடன் விரும்பி வாங்கிச் சென்றனா்.

இதுகுறித்து ஹோட்டல் மேலாளா் காதா் கூறியதாவது: தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் ஒரு புதிய முயற்சியாக கடந்த வாரம் ஹோட்டல் அமுதகம் உணவகங்களில் ரூ.99-க்கு பொது மக்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்தத் திட்டத்துக்கு பொது மக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்ததைத் தொடா்ந்து ஓகேனக்கல், பிச்சாவரம், ஏற்காடு, வண்டலூா், கன்னியாகுமரி, உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் 21 இடங்களில் ரூ.99-க்கு பிரியாணி திருவிழா நடைபெற்றது. கொடைக்கானலிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.