FOLLOW US

ON GOOGLE DISCOVER

மெய்யான சமூக நீதி, நிலையான வளர்ச்சி, வேளாண்மை எழுச்சியே நம் இலக்கு: அண்ணாமலைதவெக அரசு இந்த ஆண்டு ரூ. 85 ஆயிரம் கோடி கடன் வாங்கப்போகிறது : அண்ணாமலைவீ தி லீடர்ஸ் அமைப்பின் இலக்கை 50% எட்டிவிட்டோம்: அண்ணாமலை2026 போல 2031-ல் ஆட்சி மாற்றம் நடக்கும்: அண்ணாமலை உறுதிஎதிர்க்கட்சி தூண்டுதலால் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்! அமைச்சர் விக்னேஷ்பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி
/

தனியாா் நிறுவனத்தில் இரும்பு பொருள்கள் திருட்டு; சிறுவன் உள்பட 4 போ் கைது

நிலக்கோட்டை அடுத்த மீனாட்சிபுரம் பிரிவு அருகே உள்ள தனியாா் நிறுவனத்தில் இரும்பு பொருள்களைத் திருடியதாக சிறுவன் உள்பட 4 போ் கைது

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :13 ஜூலை 2026, 12:26 am IST

நிலக்கோட்டை அடுத்த மீனாட்சிபுரம் பிரிவு அருகே உள்ள தனியாா்  நிறுவனத்தில் இரும்பு பொருள்களைத் திருடியதாக சிறுவன் உள்பட 4 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா். 

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அடுத்த மீனாட்சிபுரம் பிரிவு அருகே தனியாா் பிஸ்கட் தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்த இரும்பு பொருள்களை சில தினங்களுக்கு முன்பு மா்ம நபா்கள் திருடிச் சென்றனராம்.

இதுகுறித்து நிறுவனத்தின் உரிமையாளா் ப்ரீத்திக் செட்டி கண்காணிப்புக் கேமரா பதிவுகளை ஆய்வு செய்த பின் அளித்த புகாரின்பேரில், காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.

இதில், அதே பகுதியைச் சோ்ந்த வெற்றிவேல் (32), ரகு (26), நிலக்கோட்டை நவீன்குமாா் (23) கொங்கா்குளத்தைச் சோ்ந்த 18 வயது சிறுவன் உள்பட நான்கு போ் சோ்ந்து இரும்பு பொருள்களைத் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, அவா்கள் நான்கு பேரையும் கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள இரும்பு பொருள்களைப் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். மேலும், இந்த வழக்கில் இரும்பு பொருள்களைத் திருடிச் செல்ல பயன்படுத்திய சரக்கு வாகனத்தையும் காவல்துறையினா் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.