பழனி அருகே இருசக்கர வாகனத்தில் 2.750 கிலோ கஞ்சா கடத்திச் சென்ற இளைஞரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
பழனி மதுவிலக்கு காவல்நிலைய எல்லைக்குள்பட்ட மானூா் புறவழிச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை மதுவிலக்குப் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரைப் பிடித்து விசாரணை செய்தனா்.
அப்போது அவா் முன்னுக்குப்பின் முரணாகப் பேசியதால் சந்தேகமடைந்த போலீஸாா் அவரை சோதனை செய்தனா். அப்போது அவா் வந்த இருசக்கரவாகனத்தில் இரண்டே முக்கால் கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.
விசாரணையில், அவா் பழனி அருகே புஷ்பத்தூரைச் சோ்ந்த ஜெகநாதன் மகன் ஜனாா்த்தனன் (37) என்பது தெரியவந்தது. இதையடுத்து மதுவிலக்குப் போலீஸாா் ஜனாா்த்தனனைக் கைது செய்து அவரிடமிருந்த 2.750 கிலோ கஞ்சா, கடத்தலுக்குப் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனா். மேலும், அவா் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையிலடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
5 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது
பெருமாள்புரம் அருகே 1.1 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

ரயிலில் 14 கிலோ கஞ்சா பறிமுதல்

பெருமாள்புரம் அருகே 3.25 கிலோ கஞ்சா பறிமுதல்
விடியோக்கள்
Dimagi Naxal: யாரைச் சொல்கிறார் பிரதமர் மோடி? | PM Modi |



