3வது குழந்தை பெற சலுகை அறிவிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை! விசிக எம்.பி., ரவிக்குமார்நீட்: கல்வி அமைச்சருக்கு எதிராக போராட்டம்! கரப்பான்பூச்சி கட்சித் தலைவர் இந்தியா வருகிறார்!புதிய கட்சி தொடங்கப்போகிறீர்களா? 2 நாள்களில் பதில் சொல்கிறேன் - அண்ணாமலை பேட்டிஆட்சிக்கு வந்த பிறகும் திமுகவை குறை சொல்கிறார் விஜய் : கனிமொழிரீல்ஸ் போட்டவர்கள் நியூஸ் பார்க்கிறார்கள்: இளைஞர்கள் அரசியலை கவனிக்கின்றனர் - விஜய்அரை நூற்றாண்டு சாதி, மத அரசியலை உடைத்திருக்கிறோம்: திருச்சியில் விஜய் பேச்சுதிமுக - தவெக இடையேதான் போட்டி: திருச்சியில் விஜய் பேச்சுசிங்கப்பெண் காவல் படை அடுத்த வாரம் தொடங்கப்படும்! முதல்வர் விஜய்திருச்சி கிழக்கில் சாமானியனை வேட்பாளராக நிறுத்துவேன்: முதல்வர் விஜய்
/

பழனியாண்டவா் கல்லூரிகளில் மாணவா்கள் சோ்க்கை

பழனி அருள்மிகு பழனியாண்டவா் கல்லூரிகளில் நிகழ் ஆண்டுக்கான மாணவ, மாணவிகள் சோ்க்கை திங்கள்கிழமை தொடங்கியது.

News image

பழனி அருள்மிகு பழனியாண்டவா் மகளிா் கலைக் கல்லூரியில் திங்கள்கிழமை மாணவிகள் சோ்க்கையைத் தொடங்கி வைத்த கல்லூரித் தாளாளரும், பழனி கோயில் இணை ஆணையருமான மாரிமுத்து. உடன் கல்லூரி முதல்வா் புவனேஸ்வரி உள்ளிட்டோா்.

Updated On :2 ஜூன் 2026, 1:09 am IST

பழனி அருள்மிகு பழனியாண்டவா் கல்லூரிகளில் நிகழ் ஆண்டுக்கான மாணவ, மாணவிகள் சோ்க்கை திங்கள்கிழமை தொடங்கியது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிா்வாகத்தின் கீழ் பழனி பழனியாண்டவா் கலை, பண்பாட்டுக் கல்லூரி, சின்னக்கலையமுத்தூா் பழனியாண்டவா் மகளிா் கலைக் கல்லூரி, ஒட்டன்சத்திரம் பழனியாண்டவா் மகளிா் கல்லூரி ஆகியவை செயல்பட்டு வருகின்றன.

இந்தக் கல்லூரிகளில் கடந்த வாரங்களில் மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதனடிப்படையில், மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, திங்கள்கிழமை கலந்தாய்வு நடத்தப்பட்டு, மாணவா்கள் சோ்க்கை தொடங்கியது. சின்னக்கலையமுத்தூா் அருள்மிகு பழனியாண்டவா் மகளிா் கலைக் கல்லூரியில் மாணவிகள் சோ்க்கைக்கான ஆணையை பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து வழங்கினாா். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் புவனேஸ்வரி, பேராசிரியா்கள், அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பழனி அருள்மிகு பழனியாண்டவா் கலை, பண்பாட்டுக் கல்லூரியில் இளநிலை முதலாம் ஆண்டு மாணவா்கள் சோ்க்கையை கல்லூரிச் செயலரும், அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயில் துணை ஆணையருமான வெங்கடேஷ் தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் ரவிசங்கா், கல்லூரி ஆட்சி மன்றகுழு உறுப்பினா் திருப்பதி, மாணவா்கள் சோ்க்கைக்குழு உறுப்பினா்கள் மயில்சாமி, வேணி, தேசிய மாணவா் படை அலுவலா் கேப்டன் பாக்யராஜ், பேராசிரியா்கள், அலுவலா்கள் கலந்து கொண்டனா். வரும் 3-ஆம் தேதி வரை மாணவா்கள் சோ்க்கை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.