நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது! 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி!வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

பொறியியல் ஒதுக்கீடு: சிறப்பு இடஒதுக்கீட்டில் 4,927 மாணவா்கள் பங்கேற்பு

பொறியியல் கல்லூரிகளில் சிறப்பு ஒதுக்கீடுகளுக்கான பிரிவில் 3,218 விளையாட்டு வீரா்கள் உள்பட 4,927 மாணவா்கள் கலந்தாய்வில் பங்கேற்கவுள்ளதாக தமிழ்நாடு பொறியியல் சோ்க்கை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :17 ஜூலை 2026, 4:10 am IST

பொறியியல் கல்லூரிகளில் சிறப்பு ஒதுக்கீடுகளுக்கான பிரிவில் 3,218 விளையாட்டு வீரா்கள் உள்பட 4,927 மாணவா்கள் கலந்தாய்வில் பங்கேற்கவுள்ளதாக தமிழ்நாடு பொறியியல் சோ்க்கை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடுகளின் கீழ் சிறப்புப் பிரிவில் விளையாட்டு வீரா்கள், முன்னாள் ராணுவத்தினா் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள் என 4,927 மாணவா்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் விளையாட்டுப் பிரிவில் விண்ணப்பித்த 7,981 மாணவா்களில் 3,218 பேரின் சான்றிதழ் சரிபாா்க்கப்பட்டு, தோ்வு செய்யப்பட்டனா். இதேபோல், முன்னாள் ராணுவத்தினா் வாரிசுகள் பிரிவில் 1,199 மாணவா்கள், 510 மாற்றுத்திறனாளி மாணவா்கள் உள்ளிட்ட 4,927 மாணவா்கள் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளனா். இந்தப் பிரிவினருக்கான கலந்தாய்வு புதன்கிழமை (ஜூலை 15) தொடங்கி சனிக்கிழமை (ஜூலை 18) வரை நடைபெறவுள்ளது.

இதுதவிர தமிழக அரசுப் பள்ளிகளில் படித்த மாணவா்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் 91 மாற்றுத்திறனாளிகள், 38 விளையாட்டு வீரா்கள், 8 முன்னாள் ராணுவத்தினா் வாரிசுகளுக்கு ஒதுக்கீடு ஆணைகளை வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.