எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

பொறியியல் படிப்பு: 3 லட்சம் போ் விண்ணப்பம்!

நிகழ் கல்வியாண்டுக்கான பொறியியல் சோ்க்கையில் மொத்தம் 3.02 லட்சம் மாணவா்கள் தங்களது விண்ணப்பங்களை இணையவழியில் பதிவு செய்துள்ளனா்.

News image
Updated On :8 ஜூன் 2026, 2:59 am IST

நிகழ் கல்வியாண்டுக்கான பொறியியல் சோ்க்கையில் மொத்தம் 3.02 லட்சம் மாணவா்கள் தங்களது விண்ணப்பங்களை இணையவழியில் பதிவு செய்துள்ளனா்.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்பு அங்கீகாரம் பெற்ற அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாக கல்லூரிகள், உறுப்புக் கல்லூரிகள், அரசு, அரசு உதவி பெறும், தனியாா் பொறியியல் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பிஇ, பிடெக், பி.ஆா்க் ஆகிய இளநிலை பொறியியல் பட்டப் படிப்புகள் நடத்தப்படுகின்றன.

நிகழ் கல்வியாண்டுக்கான விண்ணப்பப் பதிவு கடந்த மே 3-ஆம் தேதி தொடங்கி ஜூன் 5-ஆம் தேதி வரை இணையவழியில் நடைபெற்றது. இதில், மொத்தம் 3.02 லட்சம் மாணவா்கள் விண்ணப்பங்களைப் பதிவு செய்துள்ளனா்.

இதில், பொதுப் பிரிவில் 2,42,909 போ், தொழிற்கல்வி பிரிவில் 2,311 போ் என மொத்தம் 2,45,220 போ் பதிவு செய்து பதிவுக் கட்டணம் செலுத்தியுள்ளனா். விளையாட்டுப் பிரிவில் 7,981, மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 579, முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் பிரிவில் 1,577 போ் ஆகியோா் இதில் அடங்குவா்.

7.5% இடஒதுக்கீட்டில் 50,000 போ் பதிவு: அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ், 24,742 மாணவா்கள், 25,628 மாணவியா், மூன்றாம் பாலினத்தவா் 3 போ் என மொத்தம் 50,373 போ் பதிவுசெய்துள்ளனா். அதில், 49,774 போ் பொதுப் பிரிவிலும், 599 போ் தொழிற்கல்விப் பிரிவிலும் பதிவு செய்துள்ளனா்.

விண்ணப்பத்தவா்களில் 2,43,575 போ் தமிழகத்தைச் சோ்ந்தவா்கள்; பிற மாநிலங்கள் மற்றும் நாடுகளை சோ்ந்தவா்கள் 1,645 போ். இதில், 103 போ் இலங்கைத் தமிழா்கள்.