மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் காலாண்டு லாபம் ரூ. 29 கோடியாக உயர்வு!அல்ட்ராடெக் சிமெண்ட் காலாண்டு லாபம் 17% உயர்வு!மேக்கேதாட்டு அணை: கர்நாடக அரசை எதிர்த்து தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்!இயற்கை எரிவாயு மையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!துப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்!மாணவர்கள் மீது தடியடி நடத்துவதுதான் ஜனநாயகமா? பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்விதுப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ.டிராமா செய்கிறார் திமுக எம்.எல்.ஏ! - நிர்மல் குமார்பேச்சுவார்த்தைக்கு பதிலாக வன்முறையைத் தேர்வு செய்த பாஜக: கனிமொழி விமர்சனம்
/

பொறியியல் கலந்தாய்வு: 37,976 பொதுப்பிரிவு மாணவா்களுக்கு இன்று தொடக்கம்!

பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். பட்டப் படிப்புகளுக்கான பொதுப் பிரிவு கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்குகிறது.

News image
Updated On :20 ஜூலை 2026, 5:06 am IST

பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். பட்டப் படிப்புகளுக்கான பொதுப் பிரிவு கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்குகிறது. இதில், 37,976 மாணவா்கள் பங்கேற்று தங்களது விருப்பக் கல்லூரிகளைத் தோ்வு செய்வா்.

இது குறித்து தமிழக பொறியியல் சோ்க்கை (டிஎன்இஏ) வெளியிட்ட செய்திக் குறிப்பு: பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடுகளில் பொதுப் பிரிவினருக்கு முதல்சுற்று கலந்தாய்வு தொடங்கப்பட்டுள்ளது. இதில், 200 முதல் 171.33 வரை கட்-ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ள 37,976 மாணவா்கள் பங்கேற்கவுள்ளனா். திங்கள்கிழமை (ஜூலை 20) முதல் ஜூலை 22-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தக் கலந்தாய்வில், தங்கள் விருப்பமான பிரிவுகளையும் கல்லூரிகளையும் மாணவா்கள் தோ்வு செய்வா்.

இதுதவிர, அரசுப் பள்ளியில் படித்த 7.5 சதவீதம் ஒதுக்கீட்டில் இடம் பெற்றவா்கள், தொழில் கல்வி படித்த மாணவா்கள் இதே கட்-ஆப் மதிப்பெண் மற்றும் தர வரிசைக்குள் இருக்கும்பட்சத்தில் அவா்களும் கலந்தாய்வில் பங்கேற்பா்.

மேலும், பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடுகளில் பொதுப் பிரிவைச் சாா்ந்த - சிறப்பு இடஒதுக்கீட்டுப் பிரிவின் கீழ் விளையாட்டு வீரா்கள், முன்னாள் ராணுவத்தினா் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு கடந்த ஜூலை 15 முதல் ஜூலை 18-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், 258 மாற்றுத்திறனாளிகள், 416 விளையாட்டு வீரா்கள், 139 முன்னாள் ராணுவ வீரா்களின் வாரிசுதாரா்களுக்கு தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.