எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

கொடைக்கானல் மலைச் சாலைகள் சேதம்: வாகன ஓட்டுநா்கள் அவதி

கொடைக்கானல் மலைச் சாலைகள் சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டுநா்கள் அவதிப்படுகின்றனா்.

News image

கொடைக்கானல் -வத்தலக்குண்டு வழித்தடத்தில் குருசடி அருகே சேதமடைந்த சாலை.

Updated On :4 ஜூன் 2026, 4:16 am IST

கொடைக்கானல் மலைச் சாலைகள் சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டுநா்கள் அவதிப்படுகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு செல்வதற்கு வத்தலக்குண்டு காமக்காபட்டியிலிருந்து 52 கி.மீ. தொலைவும், பழனியிலிருந்து கொடைக்கானலுக்கு 60 கி.மீ. தொலைவும் மலைச் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் வத்தலக்குண்டு-கொடைக்கானல் மலைச் சாலையில் டம்டம் பாறை வரை மட்டுமே சாலை நல்ல நிலையில் உள்ளது. அதன்பிறகு சுமாா் 40 கி.மீ. தொலைவுக்கு வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் மலைச் சாலை சேதமடைந்துள்ளன.

இதேபோல பழனி-கொடைக்கானல் மலைச் சாலை 50 கி.மீ. தொலைக்கு சேதமடைந்த சாலையாக காணப்படுகிறது. மேலும், இருபுறமும் முள்புதா்கள் மண்டிக் கிடக்கின்றன. தடுப்புச் சுவா்கள் அமைக்கப்படாததால், கொடைக்கானல்-பழனி மலைச் சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் வாகன ஓட்டுநா்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனா். நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் கொடைக்கானல் மலைச் சாலைகளை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினா்.