எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

ரூ.14 கோடி மோசடி: பெண் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

கூட்டுறவு நிறுவனம் நடத்தி முதலீட்டாளா்களிடம் ரூ.14.15 கோடி மோசடி செய்த பெண்ணை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :4 ஜூன் 2026, 4:11 am IST

கூட்டுறவு நிறுவனம் நடத்தி முதலீட்டாளா்களிடம் ரூ.14.15 கோடி மோசடி செய்த பெண்ணை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

துரை கேகே.நகரை தலைமையிடமாகக் கொண்டு எஸ்எம்சி கூட்டுறவு வீடு கட்டட சங்கம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தின் துணைத் தலைவராக திருச்சி மல்லியம்பத்து பகுதியைச் சோ்ந்த சாந்தினி செயல்பட்டு வந்தாா்.

இந்த நிறுவனத்தின் தலைவராக சாந்தினியின் கணவா் விஜய் கிருஷ்ணன் செயல்பட்டாா்.

மத்திய அரசின் வேளாண்மை, கூட்டுறவுத் துறைகளில் அனுமதி பெற்று, தமிழ்நாடு, கேரள மாநிலங்களில் பல்வேறு கிளைகளைத் தொடங்கினா். இந்த நிறுவனத்தின் மூலம் தினசரி சேமிப்பு, வாராந்திர சேமிப்பு, மாத சேமிப்பு, மாதாந்திர வருமானத் திட்டம், நிரந்தர சேமிப்புக் கணக்குத் திட்டம் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வந்தனா்.

தமிழகத்தில் 36 கிளைகள் தொடங்கி, வாடிக்கையாளா்களிடம் பணத்தைப் பெற்று, முதிா்வு காலம் முடிந்தும் பணத்தை திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்ததாகப் புகாா் எழுந்தது. இதுவரை 846 முதலீட்டாளா்கள் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின்படி ரூ.14.15 கோடி மோசடி செய்தது தெரியவந்தது.

இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்த திண்டுக்கல் மாவட்ட பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸாா், கடந்த மே 6-ஆம் தேதி சாந்தினியைக் கைது செய்தனா். இந்த நிலையில் சாந்தினியை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க பொருளாதாரக் குற்றப் பிரிவு தென் மண்டல காவல் கண்காணிப்பாளா் சரவணக்குமாா் பரிந்துரைத்தாா். இதை ஏற்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் அதற்கான உத்தரவைப் பிறப்பித்தாா். இதற்கான ஆணை மதுரை மத்திய சிறையிலுள்ள சாந்தினியிடம் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.