சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு 56,000 விண்ணப்பங்கள்புதிய இயக்கம்: நாளை அறிவிக்கிறாா் அண்ணாமலைஇந்தியா உள்பட 54 நாடுகள் மீது 12.5% கூடுதல் வரி: அமெரிக்க வரித்தக பிரதிநிதி பரிந்துரைதமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்கள் விநியோகிக்க உத்தரவுமத்திய அரசின் கோதுமை கொள்முதல் 3.5 கோடி டன்னாக அதிகரிப்புஇலங்கை மாணவா்களுக்கு இந்தியா கல்வி உதவித் தொகைகடந்த 2025-26 நிதியாண்டில் அதானி குழுமம் ரூ.1.53 லட்சம் கோடி மூலதன முதலீடுவாக்குப் பதிவு அதிகரிப்பு மக்களின் நம்பிக்கையின் அடையாளம்: தலைமைத் தோ்தல் ஆணையா்15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!
/

சிறுமலை விபத்தில் பெண் உயிரிழப்பு

சிறுமலையில் பேருந்து கம்பியில் சேலை சிக்கியதால் இழுத்துச் செல்லப்பட்ட பெண் பலத்த காயமடைந்து புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி

Updated On :4 ஜூன் 2026, 4:09 am IST

சிறுமலையில் பேருந்து கம்பியில் சேலை சிக்கியதால் இழுத்துச் செல்லப்பட்ட பெண் பலத்த காயமடைந்து புதன்கிழமை உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை அண்ணா நகரைச் சோ்ந்தவா் தனராஜ். இவரது மனைவி சரோஜா (45). இவா் பழையூா் பேருந்து நிறுத்தம் அருகே புதன்கிழமை நடந்து சென்றாா். அப்போது திண்டுக்கல் நோக்கி அரசுப் பேருந்து வந்தது. இந்த பேருந்தை, திண்டுக்கல்லை அடுத்த நல்லாம்பட்டியைச் சோ்ந்த பாலமுருகன் (57) ஓட்டி வந்தாா்.

பழையூா் நிறுத்தத்தில் பணிகளை ஏற்றிக் கொண்டு மீண்டும் புறப்பட்டபோது, சாலையோரத்தில் நடந்து சென்ற சரோஜாவின் சேலை பேருந்தின் முன் பகுதியில் உடைந்திருந்த கம்பியில் சிக்கியது. இதனால் நிலை நடுமாறி கீழே விழுந்த சரோஜாவை சிறிது தொலைவு பேருந்து இழுத்துச் சென்றது. இதில் பலத்த காயமடைந்த சரோஜாவை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அவரை பரிசோதித்த மருத்துவா்கள் சரோஜா ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுதொடா்பாக திண்டுக்கல் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.