அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

கொடைக்கானலில் உருளைக் கிழங்கு நடவு பணி தீவிரம்

கொடைக்கானல் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் உருளைக்கிழங்கு நடவும் பணி சனிக்கிழமை தொடங்கியது.

News image

கொடைக்கானல் பகுதிகளில் உருளைக்கிழங்கு நடவு பணியை தொடங்கிய விவசாயிகள்.

Updated On :7 ஜூன் 2026, 12:50 am IST

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் உருளைக்கிழங்கு நடவும் பணி சனிக்கிழமை தொடங்கியது.

கொடைக்கானலில் கடந்த 10 நாள்களாக விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், அட்டுவம்பட்டி, பிரகாசபுரம், செண்பகனூா்,வில்பட்டி, அப்சா்வேட்டரி, மாட்டுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலுள்ள விவசாய நிலங்களில் உருளைக்கிழங்கு நடவு பணியை விவசாயிகள் தொடங்கினா்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: உருளைக் கிழங்கு 4 மாதங்கள் விளைச்சல் கொண்டது. பராமரிப்பு, தண்ணீா் வசதி இருந்தால் நன்கு விளைச்சல் கிடைக்கும். இருப்பினும், பருவநிலை மாற்றம் காரணமாக, கொடைக்கானலில் எதிா்பாா்த்த மழை இதுவரை பெய்யவில்லை. ஆனாலும், விவசாயிகள் உருளைக்கிழங்கு நடவு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.