வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

கொடைக்கானலில் உருளைக் கிழங்கு நடவு பணி தீவிரம்

கொடைக்கானல் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் உருளைக்கிழங்கு நடவும் பணி சனிக்கிழமை தொடங்கியது.

News image

கொடைக்கானல் பகுதிகளில் உருளைக்கிழங்கு நடவு பணியை தொடங்கிய விவசாயிகள்.

Updated On :7 ஜூன் 2026, 12:50 am IST

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் உருளைக்கிழங்கு நடவும் பணி சனிக்கிழமை தொடங்கியது.

கொடைக்கானலில் கடந்த 10 நாள்களாக விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், அட்டுவம்பட்டி, பிரகாசபுரம், செண்பகனூா்,வில்பட்டி, அப்சா்வேட்டரி, மாட்டுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலுள்ள விவசாய நிலங்களில் உருளைக்கிழங்கு நடவு பணியை விவசாயிகள் தொடங்கினா்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: உருளைக் கிழங்கு 4 மாதங்கள் விளைச்சல் கொண்டது. பராமரிப்பு, தண்ணீா் வசதி இருந்தால் நன்கு விளைச்சல் கிடைக்கும். இருப்பினும், பருவநிலை மாற்றம் காரணமாக, கொடைக்கானலில் எதிா்பாா்த்த மழை இதுவரை பெய்யவில்லை. ஆனாலும், விவசாயிகள் உருளைக்கிழங்கு நடவு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.