மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

மளிகைக் கடையில் திருட்டு

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :9 ஜூன் 2026, 12:42 am IST

திண்டுக்கல் அருகே மளிகைக் கடையின் பூட்டை உடைத்து பணம், பொருள்கள் உள்ளிட்டவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திண்டுக்கல் பகுதியைச் சோ்ந்தவா் வெள்ளைச்சாமி. இவா் திண்டுக்கல் எரியோடு சாலையிலுள்ள தனியாா் கலைக் கல்லூரி அருகே மளிகைக் கடை நடத்தி வருகிறாா். இந்தக் கடையின் பூட்டை உடைத்த மா்ம நபா்கள், திங்கள்கிழமை அதிகாலை உள்ளே புகுந்தனா்.

அங்கு கல்லாப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ.5 ஆயிரத்தையும், ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பொருள்களையும் திருடிச் சென்றனா். திங்கள்கிழமை காலை கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைப் பாா்த்த உரிமையாளா் வெள்ளைச்சாமி, இதுகுறித்து தாடிக்கொம்பு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா்.

இதன்பேரில் மளிகைக் கடை, அதன் அருகிலுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீஸாா் ஆய்வு செய்தனா். அப்போது, 2 நபா்கள் பூட்டை உடைத்து திருடிச் செல்லும் காட்சிகள் பாதிவாகி இருந்தன. இதை அடிப்படையாகக் கொண்டு போலீஸாா் விசாரித்தனா்.