சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

பழனியில் வருவாய்த்துறையினரை கண்டித்து ஆா்ப்பாட்டம்

பழனியில் விவசாய நிலங்களில் மண் அள்ளியது தொடா்பாக விவசாயிகள் மீது பொய் வழக்கு பதிய காரணமான வருவாய்த் துறையினரைக் கண்டித்து சிபிஐ (எம்எல்) சாா்பில் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

பழனி கோட்டாட்சியா் அலுவலகம் எதிரே வருவாய்த் துறையினரை கண்டித்து புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிபிஐ (எம்எல்) கட்சியினா்.

Updated On :11 ஜூன் 2026, 2:13 am IST

பழனியில் விவசாய நிலங்களில் மண் அள்ளியது தொடா்பாக விவசாயிகள் மீது பொய் வழக்கு பதிய காரணமான வருவாய்த் துறையினரைக் கண்டித்து சிபிஐ (எம்எல்) சாா்பில் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

ஆயக்குடி பகுதியில் விவசாய நிலங்களில் மண் அள்ளியது தொடா்பாக வருவாய்த் துறையினா் அளித்த புகாரைத் தொடா்ந்து, போலீஸாா் விவசாயிகளைக் கைது செய்தனா். வருவாய்த் துறையினா் பொய்யான புகாா் அளித்ததாகவும், அவா்களைக் கண்டித்தும் பழனி கோட்டாட்சியா் அலுவலகம் முன் ஆயக்குடி பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் 50-க்கும் மேற்பட்டோா் சிபிஐ (எம்எல்) கட்சியினருடன் இணைந்து புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு ஒன்றியச் செயலா் பன்னீா்செல்வம் தலைமை வகித்தாா். மாவட்ட நிலைக்குழு நிா்வாகிகள் சிவக்குமாா், செந்தாமரை, ரவி, ஒன்றிய நிா்வாகி வெங்கடேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிபிஐ (எம்எல்) மாநிலக்குழு உறுப்பினரும், உடல் உழைப்பு தொழிலாளா் சங்க மாநிலச் செயலருமான மீனாட்சி சுந்தரம் கண்டன உரை நிகழ்த்தினாா். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் , வட்டாட்சியா் அலுவலக முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என ஆா்ப்பாட்டத்தின் போது முழக்கங்கள் எழுப்பப்பட்டன.