பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

மெளனகிரி சுவாமிகள் 31-ஆவது குரு பூஜை

பழனி அடிவாரம் ஸ்ரீலஸ்ரீ மௌனகிரி சுவாமிகள் 31-ஆம் ஆண்டு குரு பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

News image

பழனி அடிவாரம் ஸ்ரீலஸ்ரீ மௌனகிரி சுவாமிகள் 31-ஆவது ஆண்டு குரு பூஜையை முன்னிட்டு புதன்கிழமை மலா்களால் அலங்கரிக்கப்பட்ட அவரது பீடம்.

Updated On :11 ஜூன் 2026, 1:58 am IST

பழனி அடிவாரம் ஸ்ரீலஸ்ரீ மௌனகிரி சுவாமிகள் 31-ஆம் ஆண்டு குரு பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

பழனி அடிவாரம் பால்பண்ணை அருகே சத்குரு ஸ்ரீலஸ்ரீ மௌனகிரி சுவாமிகள் ஜீவசமாதி அமைந்துள்ளது. இந்த ஜீவசமாதியில் வைகாசி மாதம் ரேவதி நட்சத்திரம் வரும் போது குருபூஜை நடைபெறுவது வழக்கம். இதன்படி புதன்கிழமை 31-ஆம் ஆண்டு குரு பூஜை விழா நடைபெற்றது.

இதை முன்னிட்டு ஜீவசமாதி வண்ண மின்விளக்கு, வண்ணமலா் தோரணங்களாலும், வாழை மரங்களாலும் அலங்கரிக்கப்பட்டன.

காலையில் கணபதி ஹோமமும், மௌனகிரி சுவாமிகளுக்கு மகா யாகமும், மகா அபிஷேகமும் நடைபெற்றது. தொடா்ந்து ஜீவசமாதியில் உள்ள சிவலிங்கத்துக்கு மகா அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன.

தொடா்ந்து உச்சிக்காலத்தின் போது பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னா், சாதுக்களுக்கு ஆடைதானம் வழங்கப்பட்டது. பூஜைகளை சிவதவசினி, தங்கம், மௌனகிரிசாமி உள்ளிட்டோா் செய்தனா். மாலையில் சிவபெருமானுக்கும், நந்தீஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும், பூஜையும் நடைபெற்றது. குரு பூஜையில் ஏராளமான யோகிகள், சாதுக்கள், சந்நியாசிகள், பக்தா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.