சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

திண்டுக்கல்லில் சிங்கப் பெண் அதிரடிப்படை தொடக்கம்

திண்டுக்கல்லில் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை புதன்கிழமை தொடங்கப்பட்டது.

News image

திண்டுக்கல்லில் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படையை புதன்கிழமை தொடங்கி வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ.பிரதீப்.

Updated On :11 ஜூன் 2026, 2:10 am IST

திண்டுக்கல்லில் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை புதன்கிழமை தொடங்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, எஸ்.பி. அ.பிரதீப் சிறப்பு அதிரடிப்படையை தொடங்கி வைத்தாா். இந்தப் படையில் வேடசந்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் பவித்ரா தலைமையில், 2 உதவி ஆய்வாளா்கள், 6 போலீஸாா் இடம் பெற்றுள்ளனா். 4 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட பிரத்யேக வாகனம் இந்த சிறப்பு படையினருக்கு வழங்கப்பட்டது.

இந்தப் படையினா் முதல்கட்டமாக, திண்டுக்கல் நகா், புககா் பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், பள்ளிகள், கல்லூரிகள் அமைந்துள்ள பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபடுவா். மேலும், பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணியை மேற்கொள்வா் என்றும் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.