சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

திண்டுக்கல்லில் சிங்கப் பெண் அதிரடிப்படை தொடக்கம்

திண்டுக்கல்லில் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை புதன்கிழமை தொடங்கப்பட்டது.

News image

திண்டுக்கல்லில் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படையை புதன்கிழமை தொடங்கி வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ.பிரதீப்.

Updated On :11 ஜூன் 2026, 2:10 am IST

திண்டுக்கல்லில் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை புதன்கிழமை தொடங்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, எஸ்.பி. அ.பிரதீப் சிறப்பு அதிரடிப்படையை தொடங்கி வைத்தாா். இந்தப் படையில் வேடசந்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் பவித்ரா தலைமையில், 2 உதவி ஆய்வாளா்கள், 6 போலீஸாா் இடம் பெற்றுள்ளனா். 4 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட பிரத்யேக வாகனம் இந்த சிறப்பு படையினருக்கு வழங்கப்பட்டது.

இந்தப் படையினா் முதல்கட்டமாக, திண்டுக்கல் நகா், புககா் பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், பள்ளிகள், கல்லூரிகள் அமைந்துள்ள பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபடுவா். மேலும், பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணியை மேற்கொள்வா் என்றும் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.