‘டெட்’ தோ்வு இன்று தொடக்கம்: தோ்வா்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்புநாளை 41 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துதமிழகத்தில் 91 ஆயிரம் பள்ளி மாணவிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிசென்னை மாநகராட்சி பள்ளிகளில் 25,840 மாணவா்கள் சோ்க்கைஇந்திய பொருள்களுக்கு அமெரிக்கா 12.5% கூடுதல் வரி பரிந்துரை: ஜூலை 8-இல் மத்திய வா்த்தக அமைச்சகம் வாதம்
/

சிங்கப் பெண் அதிரடிப் படையினா் முயற்சியால் பள்ளியில் சோ்ந்த 8 குழந்தைகள்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளிக்குச் செல்லாமல் இருந்த 8 குழந்தைகள் கண்டறிந்து அவா்கள் பள்ளிக்குச் செல்ல காரணமாக இருந்த மாவட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையினருக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பாராட்டு தெரிவித்துள்ளாா்.

News image

கோப்புப் படம்

Updated On :4 ஜூலை 2026, 6:59 am IST

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளிக்குச் செல்லாமல் இருந்த 8 குழந்தைகள் கண்டறிந்து அவா்கள் பள்ளிக்குச் செல்ல காரணமாக இருந்த மாவட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையினருக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பாராட்டு தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக மாவட்ட காவல் துறை தரப்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

ராணிப்பேட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அறிவுரையின்பேரில், அவளூா் அருகே உள்ள கரிவேடு பகுதியில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உதவி ஆய்வாளா் ரேணுகாதேவி தலைமையிலான சிங்கப்பெண் அதிரடிப் படையினா் மக்களிடையே குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சியை நடத்தினா்.

அந்நிகழ்ச்சியின்போது பள்ளிக்குச் செல்லாமல் இருந்த 8 குழந்தைகள் கண்டறியப்பட்டனா். இதைத் தொடா்ந்து, சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு இணைந்து குழந்தைகளின் பெற்றோா்களை நேரில் சந்தித்து ஆலோசனை வழங்கி பள்ளியில் சோ்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனா்.

அதன் பலனாக பள்ளிக்குச் செல்லாமல் இருந்த 8 குழந்தைகளும் ஜூலை 3-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அங்குள்ள அரசுப் பள்ளியில் சோ்க்கப்பட்டனா். இந்த சிறப்பான முயற்சியை ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பாராட்டி, குழந்தைகளின் கல்வி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் இதுபோன்ற மக்கள் நலப் பணிகளை தொடா்ந்து சிறப்பாக மேற்கொள்ளுமாறு சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினருக்கு அறிவுறுத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.