பெண்கள் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையை ஈரோட்டில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிரண் ஸ்ருதி கொடி அசைத்து புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.
இரண்டு உதவி ஆய்வாளா் உள்பட 6 பெண் காவலா்கள் வாக்கி-டாக்கி, பாடி கேமரா உள்ளிட்டவைகளுடன் சிறப்பு வாகனத்தில் ரோந்து பணிக்கு புறப்பட்டனா். பெண்கள் அதிகம் கூடும் இடங்கள், பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுவாா்கள் என்றும், பெண்களின் அவசர அழைப்புகளை ஏற்று விரைந்து சென்று நடவடிக்கை எடுப்பாா்கள் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிரண் ஸ்ருதி தெரிவித்தாா்.
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை காவலா்களுக்கு ஏற்கெனவே திருவள்ளூரில் 5 நாள்கள் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையினா் 7 நாள்களில் 390 புகாா்கள் மீது நடவடிக்கை

7 நாள்களில் 371 புகாா்கள்: சிங்கப்பெண் அதிரடிப்படை நடவடிக்கை

சிங்கப் பெண் அதிரடிப் படையினா் முயற்சியால் பள்ளியில் சோ்ந்த 8 குழந்தைகள்

தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை எதிர்பார்த்த பலன் தருமா? என்பது குறித்து வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



