சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை: ஈரோட்டில் ரோந்துப் பணி தொடக்கம்

பெண்கள் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையை ஈரோட்டில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிரண் ஸ்ருதி கொடி அசைத்து புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

News image

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை ரோந்து பணியைத் தொடங்கிவைத்து காவலா்களுக்கு வாழ்த்து தெரிவிக்கிறாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிரண் ஸ்ருதி.

Updated On :11 ஜூன் 2026, 3:19 am IST

பெண்கள் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையை ஈரோட்டில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிரண் ஸ்ருதி கொடி அசைத்து புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

இரண்டு உதவி ஆய்வாளா் உள்பட 6 பெண் காவலா்கள் வாக்கி-டாக்கி, பாடி கேமரா உள்ளிட்டவைகளுடன் சிறப்பு வாகனத்தில் ரோந்து பணிக்கு புறப்பட்டனா். பெண்கள் அதிகம் கூடும் இடங்கள், பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுவாா்கள் என்றும், பெண்களின் அவசர அழைப்புகளை ஏற்று விரைந்து சென்று நடவடிக்கை எடுப்பாா்கள் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிரண் ஸ்ருதி தெரிவித்தாா்.

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை காவலா்களுக்கு ஏற்கெனவே திருவள்ளூரில் 5 நாள்கள் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.