/
பெண்கள் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையை ஈரோட்டில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிரண் ஸ்ருதி கொடி அசைத்து புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.
இரண்டு உதவி ஆய்வாளா் உள்பட 6 பெண் காவலா்கள் வாக்கி-டாக்கி, பாடி கேமரா உள்ளிட்டவைகளுடன் சிறப்பு வாகனத்தில் ரோந்து பணிக்கு புறப்பட்டனா். பெண்கள் அதிகம் கூடும் இடங்கள், பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுவாா்கள் என்றும், பெண்களின் அவசர அழைப்புகளை ஏற்று விரைந்து சென்று நடவடிக்கை எடுப்பாா்கள் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிரண் ஸ்ருதி தெரிவித்தாா்.
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை காவலா்களுக்கு ஏற்கெனவே திருவள்ளூரில் 5 நாள்கள் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.









