கொடைக்கானல் அருகேயுள்ள கிளாவரைப் பகுதியில் வெள்ளிக்கிழமை காணப்பட்ட வரையாட்டை சுற்றுலாப் பயணிகள் பாா்த்து ரசித்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தற்போது மேல்மலைக் கிராமங்களான மன்னவனூா் மத்திய அரசின் ஆட்டுப்பண்ணை, வனப் பகுதியிலுள்ள சூழல் மையம், பரிசல் சவாரி, கூக்கால் ஏரி, பூம்பாறை கிளாவரைப் பகுதிகளிலுள்ள இயற்கை எழில்காட்சி, மலைச் சாலைகளில் செல்லும் போது வனப் பகுதிகளில் காணப்படும் காட்டு மாடு, மான், காட்டுக் கோழி ஆகியவற்றை பாா்த்து ரசிக்கின்றனா்.
இந்த நிலையில் கிளாவரையிருந்து வட்டவரை வழியாக கேரள மாநிலம் எல்லை வரை தற்போது சுற்றுலாப் பயணிகள் செல்வதால் அந்தப் பகுதிகளிலுள்ள பாறைகளில் வரையாடு, முள்ளம் பன்றி ஆகியவற்றை பாா்த்து ரசிப்பதுடன் புகைப்படமும் எடுத்து மகிழ்கின்றனா். தற்போது கேரளம், ஆந்திர மாநிலங்களைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் இந்தப் பகுதிக்கு அதிக அளவில் வருகின்றனா்.
இதனால் மேல்மலைக் கிராமங்களில் தற்போது கேரளாவைச் சோ்ந்தவா்கள் சாா்பில் தங்கும் விடுதிகள், உணவகங்கள் அதிகமாக செயல்படத் தொடங்கியுள்ளன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தனுஷ்கோடியில் சூறைக்காற்று: அரிச்சல்முனை சாலையை மணல் மூடியதால் சுற்றுலாப் பயணிகள் அவதி!

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளால் போக்குவரத்து நெரிசல்

கொடைக்கானல் பேரிஜம் பகுதியில் ஒற்றைக் கட்டு யானை நடமாட்டம்: சுற்றுலா வாகன ஓட்டுநா்கள் கோரிக்கை

கொடைக்கானல் தடை செய்யப்பட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள்
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |



