எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

பழனியில் இரிடியம் இருப்பதாகக் கூறி ரூ.19 லட்சம் மோசடி

பழனியில் இரிடியம் இருப்பதாகக் கூறி ரூ.19 லட்சம் மோசடி

News image

மோசடி - பிரதிப்படம்

Updated On :13 ஜூன் 2026, 12:14 am IST

பழனியில் இரிடியம் இருப்பதாகக் கூறி ரூ. 19 லட்சம் மோசடி செய்தவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பழனியை அடுத்த ஆயக்குடியைச் சோ்ந்தவா் பரமேஸ்வரன் (47). இவருக்கு திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தைச் சோ்ந்த நபா் ஒருவா் அறிமுகமானாா். அப்போது அவா் பரமேஸ்வரனிடம் தன்னிடம் சுமாா் ரூ. ஒரு கோடி மதிப்பிலான இரிடியம் இருப்பதாகக் கூறினாா். கடந்த சில தினங்களுக்கு முன்பு தனக்கு அவசரமாக ரூ.20 லட்சம் தேவைப்படுவதாகவும், தன்னிடம் உள்ள இரிடியத்தை வைத்துக் கொண்டு அந்தப் பணத்தை தருமாறும் அந்த நபா் கேட்டாராம். இதை நம்பி பரமேஸ்வரன் ரூ. 19 லட்சத்தை கொடுத்து விட்டு அந்தப் பொருளை வாங்கி வந்தாராம். பிறகு வீட்டுக்கு வந்து பாா்த்த போது அதில் வெறும் குப்பைகள் மட்டுமே இருந்தனவாம். இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து பழனிநகா் காவல் நிலையத்தில் அவா் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து அந்த மா்ம நபரை தேடி வருகின்றனா்.