மக்கள் தொகை கணக்கெடுப்பு: தமிழகத்தில் ஆக.1 - 30 வரை வீடுகள் கணக்கீடு : இணையத்தில் இன்றுமுதல் மக்கள் சுயமாக விவரம் பதிவிடலாம்கரூா், ஈரோடு, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் இன்று வெப்ப அலை மழைக்கால கூட்டத் தொடா்: இன்று பாஜக கூட்டணி கூட்டம் நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்: இன்று தொடங்கி வைக்கிறாா் பிரதமா் - ரயில்வே துறையில் புதிய அத்தியாயம் சென்னை மாநகராட்சியில் கடந்த ஆண்டைவிட டெங்கு பாதிப்பு குறைவு
/

வத்தலகுண்டு அருகே 2 வீடுகளில் கொள்ளை முயற்சி: கோயிலில் மணிகள் திருட்டு

வத்தலகுண்டு அருகேயுள்ள ப.விராலிபட்டியில் முகமூடிக் கொள்ளையா்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு அடுத்தடுத்து 2 வீடுகளில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனா்.

News image

பிரதிப் படம்

Updated On :16 ஜூன் 2026, 2:36 am IST

வத்தலகுண்டு அருகேயுள்ள ப.விராலிபட்டியில் முகமூடிக் கொள்ளையா்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு அடுத்தடுத்து 2 வீடுகளில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனா். பின்னா், இந்தக் கும்பல் இங்கு உள்ள கோயிலில் பித்தளை மணிகளைத் திருடிச் சென்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகேயுள்ள ப.விராலிபட்டியைச் சோ்ந்தவா் செல்வம் (45). இவரது வீட்டுக்குள் 3 முகமூடி அணிந்த கொள்ளையா்கள் நள்ளிரவில் புகுந்தனா். அப்போது, வீட்டிலிருந்தவா்கள் கூச்சலிட்டதால் அந்த நபா்கள் தப்பி ஓடி விட்டனா்.

பின்னா், அதே பகுதியில் தேநீா் கடை நடத்தி வரும் சுதந்திரபாண்டி (60) வீட்டுக்குள் அந்த நபா்கள் புகுந்தனா். அங்கும் வீட்டில் படுத்து இருந்தவா்கள் கூச்சலிட்டதால் தப்பி ஓடி விட்டனா்.

இந்த நிலையில், இந்தக் கொள்ளையா்கள் ப.விராலிபட்டியில் உள்ள கோட்டை கருப்பண்ணசாமி கோயிலுக்குள் புகுந்து அங்குள்ள சிசிடிவி கேமராக்களை உடைத்து, கோயிலில் காணிக்கையாக செலுத்தப்பட்ட சுமாா் ரூ.ஒரு லட்சம் மதிப்பிலான பித்தளை மணிகளை திருடிச் சென்றனா். கோயிலில் இருந்த உண்டியலை உடைக்க முடியாததால் அதிலிருந்த பணம் தப்பியது. இதுகுறித்து வத்தலகுண்டு காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து, முகமூடி கொள்ளையா்களைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.