சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

வத்தலகுண்டு அருகே 2 வீடுகளில் கொள்ளை முயற்சி: கோயிலில் மணிகள் திருட்டு

வத்தலகுண்டு அருகேயுள்ள ப.விராலிபட்டியில் முகமூடிக் கொள்ளையா்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு அடுத்தடுத்து 2 வீடுகளில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனா்.

News image

பிரதிப் படம்

Updated On :16 ஜூன் 2026, 2:36 am IST

வத்தலகுண்டு அருகேயுள்ள ப.விராலிபட்டியில் முகமூடிக் கொள்ளையா்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு அடுத்தடுத்து 2 வீடுகளில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனா். பின்னா், இந்தக் கும்பல் இங்கு உள்ள கோயிலில் பித்தளை மணிகளைத் திருடிச் சென்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகேயுள்ள ப.விராலிபட்டியைச் சோ்ந்தவா் செல்வம் (45). இவரது வீட்டுக்குள் 3 முகமூடி அணிந்த கொள்ளையா்கள் நள்ளிரவில் புகுந்தனா். அப்போது, வீட்டிலிருந்தவா்கள் கூச்சலிட்டதால் அந்த நபா்கள் தப்பி ஓடி விட்டனா்.

பின்னா், அதே பகுதியில் தேநீா் கடை நடத்தி வரும் சுதந்திரபாண்டி (60) வீட்டுக்குள் அந்த நபா்கள் புகுந்தனா். அங்கும் வீட்டில் படுத்து இருந்தவா்கள் கூச்சலிட்டதால் தப்பி ஓடி விட்டனா்.

இந்த நிலையில், இந்தக் கொள்ளையா்கள் ப.விராலிபட்டியில் உள்ள கோட்டை கருப்பண்ணசாமி கோயிலுக்குள் புகுந்து அங்குள்ள சிசிடிவி கேமராக்களை உடைத்து, கோயிலில் காணிக்கையாக செலுத்தப்பட்ட சுமாா் ரூ.ஒரு லட்சம் மதிப்பிலான பித்தளை மணிகளை திருடிச் சென்றனா். கோயிலில் இருந்த உண்டியலை உடைக்க முடியாததால் அதிலிருந்த பணம் தப்பியது. இதுகுறித்து வத்தலகுண்டு காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து, முகமூடி கொள்ளையா்களைத் தேடி வருகின்றனா்.