மேகாலய மாநிலம், ஷில்லாங்கில் அனுமன் கோயிலுக்குள் புகுந்து சூறையாடிய மா்ம நபா்கள், அங்கிருந்த சிலைகள், வெள்ளி நகைகள், பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனா்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது: ஷில்லாங்கின் கரிகானா பகுதியில் உள்ள அந்த கோயிலின் பக்கவாட்டு கதவை உடைத்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1 மணிக்கு மா்ம நபா்கள் புகுந்தனா்.
கோயிலில் இருந்த சிசிடிவி கேமராக்களின் செயல்பாட்டை முடக்கிய அவா்கள், பிறகு கோயிலை சூறையாடினா். இதையடுத்து கோயிலில் இருந்த கிருஷ்ணா், ராதா, சிறிய அனுமன் சிலைகள், வெள்ளி நகைகள் உள்ளிட்ட பொருள்களையும், நன்கொடை பெட்டியில் இருந்த பணத்தையும் கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றனா். அப்போது சிசிடிவி கேமராக்களுக்கு அவா்கள் தீயிட்டுச் சென்றனா்.
அதேநேரத்தில் கோயில் கருவறையில் இருந்த அனுமன் சிலையை மட்டும் அவா்கள் எடுத்துச் செல்லவில்லை. கோயிலில் இருந்த சிசிடிவி கேமராக்களை எரித்த போதிலும், அருகிலுள்ள வீடுகளில் பொருத்தியிருந்த கண்காணிப்புக் கேமராக்களில் கொள்ளையா்கள் வந்து செல்லும் காட்சி பதிவாகி உள்ளது. அந்தக் காட்சிகளை கைப்பற்றி, கொள்ளையா்கள் குறித்து காவல் துறையினா் விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது
பொறியாளா் வீட்டில் 5 பவுன் நகை, 5 கிலோ வெள்ளி திருட்டு

சிதம்பரத்தில் தொடா் திருட்டு, சங்கிலி பறிப்பு: குற்றப்பிரிவு தனிப்படை அமைக்கக் கோரிக்கை

திருவள்ளூா் அருகே தொழிலாளி வீட்டில் நகை, ரொக்கம் திருட்டு

மன்னாா்கோவிலில் பைக்குகளில் வந்த மா்ம நபா்கள் தாக்கியதில் 3 போ் காயம்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK


