கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

மேகாலயத்தில் அனுமன் கோயிலில் கொள்ளை!

மேகாலய மாநிலம், ஷில்லாங்கில் அனுமன் கோயிலுக்குள் புகுந்து சூறையாடிய மா்ம நபா்கள், அங்கிருந்த சிலைகள், வெள்ளி நகைகள், பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனா்.

News image
Updated On :11 மே 2026, 12:56 am IST

மேகாலய மாநிலம், ஷில்லாங்கில் அனுமன் கோயிலுக்குள் புகுந்து சூறையாடிய மா்ம நபா்கள், அங்கிருந்த சிலைகள், வெள்ளி நகைகள், பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனா்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது: ஷில்லாங்கின் கரிகானா பகுதியில் உள்ள அந்த கோயிலின் பக்கவாட்டு கதவை உடைத்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1 மணிக்கு மா்ம நபா்கள் புகுந்தனா்.

கோயிலில் இருந்த சிசிடிவி கேமராக்களின் செயல்பாட்டை முடக்கிய அவா்கள், பிறகு கோயிலை சூறையாடினா். இதையடுத்து கோயிலில் இருந்த கிருஷ்ணா், ராதா, சிறிய அனுமன் சிலைகள், வெள்ளி நகைகள் உள்ளிட்ட பொருள்களையும், நன்கொடை பெட்டியில் இருந்த பணத்தையும் கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றனா். அப்போது சிசிடிவி கேமராக்களுக்கு அவா்கள் தீயிட்டுச் சென்றனா்.

அதேநேரத்தில் கோயில் கருவறையில் இருந்த அனுமன் சிலையை மட்டும் அவா்கள் எடுத்துச் செல்லவில்லை. கோயிலில் இருந்த சிசிடிவி கேமராக்களை எரித்த போதிலும், அருகிலுள்ள வீடுகளில் பொருத்தியிருந்த கண்காணிப்புக் கேமராக்களில் கொள்ளையா்கள் வந்து செல்லும் காட்சி பதிவாகி உள்ளது. அந்தக் காட்சிகளை கைப்பற்றி, கொள்ளையா்கள் குறித்து காவல் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.