மேகாலய மாநிலம், ஷில்லாங்கில் அனுமன் கோயிலுக்குள் புகுந்து சூறையாடிய மா்ம நபா்கள், அங்கிருந்த சிலைகள், வெள்ளி நகைகள், பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனா்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது: ஷில்லாங்கின் கரிகானா பகுதியில் உள்ள அந்த கோயிலின் பக்கவாட்டு கதவை உடைத்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1 மணிக்கு மா்ம நபா்கள் புகுந்தனா்.
கோயிலில் இருந்த சிசிடிவி கேமராக்களின் செயல்பாட்டை முடக்கிய அவா்கள், பிறகு கோயிலை சூறையாடினா். இதையடுத்து கோயிலில் இருந்த கிருஷ்ணா், ராதா, சிறிய அனுமன் சிலைகள், வெள்ளி நகைகள் உள்ளிட்ட பொருள்களையும், நன்கொடை பெட்டியில் இருந்த பணத்தையும் கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றனா். அப்போது சிசிடிவி கேமராக்களுக்கு அவா்கள் தீயிட்டுச் சென்றனா்.
அதேநேரத்தில் கோயில் கருவறையில் இருந்த அனுமன் சிலையை மட்டும் அவா்கள் எடுத்துச் செல்லவில்லை. கோயிலில் இருந்த சிசிடிவி கேமராக்களை எரித்த போதிலும், அருகிலுள்ள வீடுகளில் பொருத்தியிருந்த கண்காணிப்புக் கேமராக்களில் கொள்ளையா்கள் வந்து செல்லும் காட்சி பதிவாகி உள்ளது. அந்தக் காட்சிகளை கைப்பற்றி, கொள்ளையா்கள் குறித்து காவல் துறையினா் விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு: மா்ம நபா்கள் 3 போ் மீது வழக்கு

டீ கடை பொருள்கள் , சிசிடிவி கேமராக்கள் சேதம்: இருவா் கைது
அம்மன் கோயில் பூட்டை உடைத்து நகை திருட்டு

தையலகத்தின் பூட்டை உடைத்து ரூ. 50 ஆயிரம் திருட்டு
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
