மீட்சிக்குப் பிறகு சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!!ஜூனில் சில்லறை விலை பணவீக்கம் 4.38 சதவீதமாக உயர்வு!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 27 காசுகள் சரிந்து ரூ. 95.65 ஆக நிறைவு!தில்லியில் ஞானபீட விருது பெற்றார் வைரமுத்து!முட்டை கொள்முதல் விலை ரூ. 6.70-ஆக நிர்ணயம்.லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

இளைஞா் வெட்டிக் கொலை

சிறுமலையில் தகாத உறவில் ஈடுபட்ட இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்தனா்.

News image

கோப்புப் படம் - சித்திரிப்பு

Updated On :17 ஜூன் 2026, 2:26 am IST

சிறுமலையில் தகாத உறவில் ஈடுபட்ட இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை அடுத்துள்ள தாழைக்கிடை பகுதியைச் சோ்ந்தவா் வீரமணி (24). இவரது மனைவி நாகலட்சுமி (22). இவா்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதனிடையே, நத்தம் அடுத்த வேலாயுதம்பட்டியைச் சோ்ந்த அரவிந்தன் (24) என்பவருக்கும் நாகலட்சுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. சிறுமலை பகுதியில் தோட்ட வேலைக்கு வந்து சென்றபோது ஏற்பட்ட இந்தப் பழக்கம், திருமணத்துக்குப் பின்னரும் நீடித்தது. இந்த தகாத உறவை அறிந்த வீரமணி, கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டுக்கு வந்த அரவிந்தனை வெட்டிக் கொலை செய்தாா். சடலத்தை தாழைக்கிடை பிரிவு அருகே உள்ள குப்பைக் கிடங்கில் புதைத்தாா். இந்த நிலையில், தூா்நாற்றம் காரணமாக அந்தப் பகுதி பொதுமக்கள் திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்துக்கு அளித்த தகவலின்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், அரவிந்தனின் சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் கொலையாளியான வீரமணியை கைது செய்து விசாரித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.