நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

குளத்தில் மூழ்கி 2 சகோதரா்கள் உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகே குளத்து நீரில் மூழ்கி 2 சிறுவா்கள் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :17 ஜூன் 2026, 2:27 am IST

ஒட்டன்சத்திரம் அருகே குளத்து நீரில் மூழ்கி 2 சிறுவா்கள் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள காசிகவுண்டன்புதூரைச் சோ்ந்தவா் ஆறுமுகம். இவரது மனைவி ரத்னம். தம்பதிக்கு வேல்முருகன் (13) லோகேஸ்வரன் (7) ஆகிய 2 மகன்கள் இருந்தனா். கருத்து வேறுபாடு காரணமாக, ரத்னம் தனது 2 மகன்களுடன் ஆலணம்பட்டியில் உள்ள ஒரு தோட்டத்தில் தனியாக வசித்து வந்தாா். திங்கள்கிழமை மாலை முதல் வேல்முருகன், லோகேஸ்வரன் ஆகியோரைக் காணவில்லை என ரத்னம் தேடி வந்தாா். இந்த நிலையில், அந்தப் பகுதியில் உள்ள குளத்தில் சிறுவா்கள் சடலமாக மிதப்பதாக அம்பிளிக்கை காவல் நிலையத்துக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனா். அதன் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், ஒட்டன்சத்திரம் தீயணைப்புத் துறையினா் உதவியுடன் 2 சடலங்களையும் மீட்டு கூறாய்வுக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு சடலங்களை அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.