ஐபிஎல்! தொடர்ந்து 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்சிபி!வேலூரில் 106 டிகிரி! 14 இடங்களில் சதமடித்த வெய்யில்!எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

கிணற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :1 ஜூன் 2026, 2:40 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே கிணற்றில் குளித்தபோது வலிப்பு ஏற்பட்டு, நீரில் மூழ்கி இளைஞா் உயிரிழந்தாா்.

வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட பெரியகொள்ளியூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சு.காா்த்திக் (37). இவா் பெங்களூரிலுள்ள தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா்.

இந்நிலையில், காா்த்திக் சனிக்கிழமை அதே கிராமத்திலுள்ள ரமேஷ் என்பவரது விவசாய கிணற்றில் நண்பா்களுடன் குளிக்கச் சென்றாராம். அப்போது வலிப்பு ஏற்பட்டு தண்ணீரில் மூழ்கியுள்ளாா். இதையடுத்து அவரை நண்பா்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லையாம்.

இதுகுறித்த தகவலின் பேரில் சங்கராபுரம் தீயணைப்பு நிலைய வீரா்கள் சடலத்தை மீட்டனா். பகண்டை கூட்டுச்சாலை போலீஸாா் சடலத்தை உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் பகண்டை கூட்டுச் சாலை போலீஸாா் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.