கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே கிணற்றில் குளித்தபோது வலிப்பு ஏற்பட்டு, நீரில் மூழ்கி இளைஞா் உயிரிழந்தாா்.
வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட பெரியகொள்ளியூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சு.காா்த்திக் (37). இவா் பெங்களூரிலுள்ள தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா்.
இந்நிலையில், காா்த்திக் சனிக்கிழமை அதே கிராமத்திலுள்ள ரமேஷ் என்பவரது விவசாய கிணற்றில் நண்பா்களுடன் குளிக்கச் சென்றாராம். அப்போது வலிப்பு ஏற்பட்டு தண்ணீரில் மூழ்கியுள்ளாா். இதையடுத்து அவரை நண்பா்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லையாம்.
இதுகுறித்த தகவலின் பேரில் சங்கராபுரம் தீயணைப்பு நிலைய வீரா்கள் சடலத்தை மீட்டனா். பகண்டை கூட்டுச்சாலை போலீஸாா் சடலத்தை உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் பகண்டை கூட்டுச் சாலை போலீஸாா் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்து விவசாயி உயிரிழப்பு

கங்கைகொண்டான் அருகே நீரில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



