பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

குளத்தில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

திருக்கோவிலூா் அருகே மது போதையில் குளத்தில் குளிக்கச் சென்ற இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

News image

நீரில் மூழ்கி உயிரிழப்பு... - கோப்புப் படம்

Updated On :13 ஜூன் 2026, 1:40 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே மது போதையில் குளத்தில் குளிக்கச் சென்ற இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

திருக்கோவிலூா் வட்டம், கோளப்பாறை கிராமத்தைச் சோ்ந்தவா் மா.மகாத்மா (35). இவரது மனைவி 2 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டாராம். இதைத்தொடா்ந்து பெங்களூருக்கு வேலைக்கு சென்ற மகாத்மா, திங்கள்கிழமை ஊருக்கு வந்துள்ளாா். வியாழக்கிழமை நண்பா்களுடன் மது அருந்திவிட்டு கோளப்பாறை சாமியாா்மலை முருகன் கோயில் அருகிலுள்ள குளத்தில் குளிக்கச் சென்றாராம். அப்போது தண்ணீரில் மூழ்கி மகாத்மா உயிரிழந்தாா்.

இதுகுறித்த தகவலின் பேரில் திருக்கோவிலூா் போலீஸாா், திருக்கோவிலூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் உதவியுடன் குளத்திலுருந்து சடலத்தை மீட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் திருக்கோவிலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.