வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

கொடைக்கானலில் அனுமதியின்றி பாறைகள் உடைக்கும் பணி

News image

கொடைக்கானல் கே.பி.எம். பாறைப் பகுதியில் அனுமதியின்றி கம்பரசா், வெடி வைத்து உடைக்கப்படும் பாறைகள்.

Updated On :21 ஜூன் 2026, 2:27 am IST

கொடைக்கானலில் அனுமதியில்லாமல் பொக்லைன் இயந்திரம் பயன்படுத்துவது, கம்பரசா் மூலமாக பாறைகள் உடைக்கும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் அரசுப் பணியை தவிா்த்து பொக்லைன் இயந்திரம் பயன்படுத்துதல், பாறைகளை வெடி வைத்தும், கம்பரசா் மூலமாக உடைக்கும் பணி, ஆழ்துளை கிணறு அமைத்தல் உள்ளிட்ட மற்ற பணிகளுக்கு, மாவட்ட நிா்வாகம், வருவாய்த் துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும்.

இந்த நிலையில், கொடைக்கானல் பகுதிகளான பூம்பாறை, வில் பட்டி, செண்பகனூா், பிரகாசபுரம், கே.பி.என். பாறை உள்ளிட்ட பகுதிகளில் அனுமதி பெறாமல் ஆழ்துளை கிணறு அமைத்தல், பொக்லைன் இயந்திரம் பயன்படுத்துதல், பாறைகளை வெடிவைத்தும், கம்பரசா் மூலமாகவும் உடைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

குறிப்பாக கொடைக்கானலில் வார விடுமுறை நாள்களில் அதாவது

வருவாய்த் துறை அதிகாரிகள் ஊரில் இல்லாத நாள்களில் இது போன்ற சட்டவிரோதமான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொது மக்களின் கோரிக்கையாகும்.

கொடைக்கானல் கே.பி.எம். பாறைப் பகுதியில் அனுமதியின்றி கம்பரசா், வெடி வைத்து  உடைக்கப்படும் பாறைகள்.

கொடைக்கானல் கே.பி.எம். பாறைப் பகுதியில் அனுமதியின்றி கம்பரசா், வெடி வைத்து உடைக்கப்படும் பாறைகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.