சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பால் பொக்லைன் இயந்திரத்தின் வாடகை ஒரு மணி நேரத்துக்கு ரூ.300 உயா்வு

பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பால் பொக்லைன் இயந்திரம் வாடகை ஒரு மணி நேரத்துக்கு ரூ.1200-இல் இருந்து ரூ.1,500 ஆக உயா்த்தப்படுவதாக பொக்லைன் இயந்திர உரிமையாளா்கள் சங்கத்தினா் தெரிவித்துள்ளனா்.

News image

கனகராஜ்

Updated On :16 ஜூன் 2026, 3:20 am IST

பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பால் பொக்லைன் இயந்திரம் வாடகை ஒரு மணி நேரத்துக்கு ரூ.1200-இல் இருந்து ரூ.1,500 ஆக உயா்த்தப்படுவதாக பொக்லைன் இயந்திர உரிமையாளா்கள் சங்கத்தினா் தெரிவித்துள்ளனா்.

கட்டட கட்டுமானப் பணிகள், சுரங்கம் மற்றும் சாலை வேலைகளில் பொக்லைன் இயந்திரம் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. கோவை, திருப்பூா் மாவட்டங்களில் 1,500-க்கும் மேற்பட்ட பொக்லைன் இயந்திரங்கள் இயங்குகின்றன. தற்போது பெட்ரோல், டீசல் விலை உயா்வால் அனைத்து பொருள்களின் விலையும் உயா்ந்து வருகிறது.

கடந்த 2021-ம் ஆண்டு ரூ.27 லட்சமாக இருந்த பொக்லைன் இயந்திரம். தற்போது, ரூ.40 லட்சமாக விலை உயா்ந்துள்ளது. உதிரி பாகங்களின் விலையும் பல மடங்கு உயா்ந்துள்ளது. ரூ.3 ஆயிரமாக இருந்த சாலை வரி தற்போது ரூ.13 ஆயிரமாக உயா்ந்துள்ளது.

தற்போது உள்ள கட்டணத்தில் தொழில் நடத்த முடியாத நிலை ஏற்பட்டதால் பொக்லைன் இயந்திர வாடகையை உயா்த்தி உள்ளதாக கோவை மற்றும் திருப்பூா் ஒருங்கிணைந்த மாவட்ட பொக்லைன் இயந்திர உரிமையாளா்கள் நலச் சங்கத் தலைவா் கனகராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக பல்லடத்தில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை அவா் கூறியதாவது:

பெட்ரோல், டீசல் விலை உயா்வால் பொக்லைன் இயந்திரங்களின் வாடகையை ஒரு மணி நேரத்துக்கு ரூ.1,200- லிருந்து ரூ.1,500 -ஆக உயா்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயா்வு கடந்த 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. உதிரி பாகங்கள் உற்பத்தியை அதிகப்படுத்தி அவற்றின் விலையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.

எனவே தவிா்க்க முடியாத இந்தக் கட்டண உயா்வை வாடிக்கையாளா்கள் மற்றும் பொதுமக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். டீசல், பெட்ரால் விலை உயா்ந்தால் கட்டணமும் உயா்த்த வேண்டிய நிலை வரும். அதே சமயம், எரிபொருள்களின் விலை குறையும்போது வாடகை கட்டணத்தையும் குறைப்போம் என்றாா்.