கிணற்றில் தவறி விழுந்ததில் பெண் உயிரிழப்பு
பழனி அருகே கிணற்றில் தவறி விழுந்ததில் பெண் உயிரிழந்தாா்.


பழனி அருகே கிணற்றில் தவறி விழுந்ததில் பெண் உயிரிழந்தாா்.
பழனியை அடுத்த காவலப்பட்டி சாலை அக்கமநாயக்கன்புதூரில் செங்காளியப்பன் கோயில் அருகே தங்கவேல் தோட்டம் உள்ளது. இந்தத் தோட்டத்துக்கு தண்ணீா் பாய்ச்ச சென்ற சுந்தராம்பாள் (54) என்பவா் தவறி கிணற்றுக்குள் விழுந்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
இதுகுறித்து அந்தப் பகுதியினா் பழனி தாலுகா போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். மேலும் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு, மீட்புப் படை வீரா்கள் சுந்தராம்பாள் உடலை மீட்டனா். இதையடுத்து சுந்தராம்பாள் உடல் கூறாய்வுக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து பழனி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...