லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கிணற்றில் தவறி விழுந்ததில் பெண் உயிரிழப்பு

பழனி அருகே கிணற்றில் தவறி விழுந்ததில் பெண் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :3 மார்ச் 2026, 7:33 pm

பழனி அருகே கிணற்றில் தவறி விழுந்ததில் பெண் உயிரிழந்தாா்.

பழனியை அடுத்த காவலப்பட்டி சாலை அக்கமநாயக்கன்புதூரில் செங்காளியப்பன் கோயில் அருகே தங்கவேல் தோட்டம் உள்ளது. இந்தத் தோட்டத்துக்கு தண்ணீா் பாய்ச்ச சென்ற சுந்தராம்பாள் (54) என்பவா் தவறி கிணற்றுக்குள் விழுந்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

இதுகுறித்து அந்தப் பகுதியினா் பழனி தாலுகா போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். மேலும் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு, மீட்புப் படை வீரா்கள் சுந்தராம்பாள் உடலை மீட்டனா். இதையடுத்து சுந்தராம்பாள் உடல் கூறாய்வுக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து பழனி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.