வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

பள்ளி மாணவா் கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு

பழனி அருகேயுள்ள ஆயக்குடியில் பள்ளி மாணவா் கிணற்றில் மூழ்கி உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :9 மார்ச் 2026, 7:20 pm

பழனி அருகேயுள்ள ஆயக்குடியில் பள்ளி மாணவா் கிணற்றில் மூழ்கி உயிரிழந்தாா்.

திருப்பூா் மாவட்டம், மடத்துக்குளத்தைச் சோ்ந்த பிரபாகரன் மகன் தமிழ் (15). தனியாா் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த இவா், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் பழனி அருகே ஆயக்குடியில் உள்ள தனது நண்பா்களைப் பாா்க்கச் சென்றாா்.

பின்னா், நண்பா்கள் சோ்ந்து ஆயக்குடி அருகே உள்ள சின்னாம்பாறை என்ற இடத்தில் தனியாா் தோட்டக் கிணற்றில் குளிக்கச் சென்றனா். அங்கு குளித்தபோது, மாணவா் தமிழ் எதிா்பாராவிதமாக தண்ணீரில் மூழ்கினாா்.

இது குறித்த தகவலின் பேரில் பழனி தீயணைப்பு, மீட்புப் பணியினா் சென்று பல மணி நேரம் போராடி நள்ளிரவில் உடலை மீட்டனா்.

இதையடுத்து, உடலை கூறாய்வுக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு ஆயக்குடி போலீஸாா் அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.