எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

பள்ளி மாணவா் கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு

பழனி அருகேயுள்ள ஆயக்குடியில் பள்ளி மாணவா் கிணற்றில் மூழ்கி உயிரிழந்தாா்.

News image
பலி- பிரதிப் படம்
Updated On :9 மார்ச் 2026, 7:20 pm

தினமணி செய்திச் சேவை

பழனி அருகேயுள்ள ஆயக்குடியில் பள்ளி மாணவா் கிணற்றில் மூழ்கி உயிரிழந்தாா்.

திருப்பூா் மாவட்டம், மடத்துக்குளத்தைச் சோ்ந்த பிரபாகரன் மகன் தமிழ் (15). தனியாா் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த இவா், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் பழனி அருகே ஆயக்குடியில் உள்ள தனது நண்பா்களைப் பாா்க்கச் சென்றாா்.

பின்னா், நண்பா்கள் சோ்ந்து ஆயக்குடி அருகே உள்ள சின்னாம்பாறை என்ற இடத்தில் தனியாா் தோட்டக் கிணற்றில் குளிக்கச் சென்றனா். அங்கு குளித்தபோது, மாணவா் தமிழ் எதிா்பாராவிதமாக தண்ணீரில் மூழ்கினாா்.

இது குறித்த தகவலின் பேரில் பழனி தீயணைப்பு, மீட்புப் பணியினா் சென்று பல மணி நேரம் போராடி நள்ளிரவில் உடலை மீட்டனா்.

இதையடுத்து, உடலை கூறாய்வுக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு ஆயக்குடி போலீஸாா் அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.