ஒட்டன்சத்திரம் பகுதியில் ரூ.68.95 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சா் அர. சக்கரபாணி செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பல்வேறு ஊராட்சிகள், ஒட்டன்சத்திரம் நகராட்சிப் பகுதியில் ரூ.64.50 கோடியில் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, ரூ.4.45 கோடியில் முடிவுற்ற திட்டப் பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிகளுக்கு உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி தலைமை வகித்தாா்.
ஒட்டன்சத்திரம் நகராட்சியில் ரூ.3.26 கோடியில் புதுப்பிக்கப்பட்ட பேருந்து நிலையம், வண்ணாம்பாறை அருகே ரூ.10 லட்சத்திலும், வீரலப்பட்டியில் ரூ.9 லட்சத்திலும் புதிதாக அமைக்கப்பட்ட பேருந்து நிறுத்த நிழல்குடைகள் உள்பட ரூ.4.45 கோடியில் முடிவுற்ற திட்டப் பணிகளை அமைச்சா் தொடங்கிவைத்தாா்.
ஒட்டன்சத்திரத்தை அடுத்த மரிச்சிலம்பு ஊராட்சியில் ரூ.64.50 கோடியில் மின் நிலையம் அமைக்கும் பணிக்கு அமைச்சா் அர. சக்கரபாணி அடிக்கல் நாட்டினாா்.
இந்த நிகழ்ச்சிகளில் ஒட்டன்சத்திரம் நகராட்சி ஆணையா் சுவேதா, தமிழ்நாடு மின் வாரியத்தின் தலைமைப் பொறியாளா் (மதுரை) சந்திரா, மேற்பாா்வை பொறியாளா் (திண்டுக்கல்) சைமன் சாா்லஸ், திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அலுவலா் இரா.சிவா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்

குளங்களுக்கு தண்ணீா் கொண்டுவர ரூ.5,400 கோடியில் புதிய திட்டம்: அமைச்சா் அர.சக்கரபாணி

ரூ. 2.1 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தொடங்கி வைத்தாா்

வட சென்னை பகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் - அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆய்வு

ரூ.46 லட்சத்தில் வளா்ச்சித் திட்டப் பணி: அமைச்சா் தொடங்கி வைத்தாா்
வீடியோக்கள்

இளம் வயதில் அரசியலுக்கு வந்தது ஏன்?: மனம் திறந்த மைதிலி தாக்குர் | Maithili Thakur |
தினமணி வீடியோ செய்தி...

சென்னை வந்தடைந்த அஜித்குமார்!
தினமணி வீடியோ செய்தி...

துரு துரு பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

நம் வீட்டு கிச்சன் கதவுகளைத் தட்டத் தொடங்கிய ஈரான் போர்! | Explainer | LPG Crisis | Dinamani
தினமணி வீடியோ செய்தி...

