சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

எரிவாயு தட்டுப்பாடு: பழனி நவீன மயானத்தில் சடலம் எரிப்பதில் சிக்கல்

தமிழ்நாட்டில் வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு உருளை தட்டுப்பாடு காரணமாக பழனியில் உள்ள நகராட்சி நவீன எரிவாயு மயானத்தில் சடலங்களை எரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

News image
பழனி சிவகிரிப்பட்டி சுற்றுச் சாலையில் உள்ள நகராட்சி நவீன எரிவாயு மயானம்.
Updated On :11 மார்ச் 2026, 11:59 pm

தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டில் வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு உருளை தட்டுப்பாடு காரணமாக பழனியில் உள்ள நகராட்சி நவீன எரிவாயு மயானத்தில் சடலங்களை எரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பழனி சிவகிரிப்பட்டி சுற்றுச் சாலையில் நகராட்சி நவீன எரிவாயு மயானம் செயல்பட்டு வருகிறது. பழனி, சுற்றுவட்டார கிராமங்களில் இறந்தவா்களது உடலை தகனம் செய்ய இங்கு உறவினா்கள் கொண்டு வருகின்றனா். பழனியில் உள்ள இந்த எரிவாயு மயானத்தை அரிமா சங்கத்தினா், தன்னாா்வலா்கள் இணைந்து சேவை நோக்கில் செயல்படுத்தி வருகின்றனா். மாதத்துக்கு நூறு உடல்கள் வரை இங்கு எரிவாயு

உருளைகளைப் பயன்படுத்தி எரியூட்டப்படுகின்றன. இதுவரை 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உடல்கள் இங்கு தகனம் செய்யப்பட்டுள்ளன.

தற்போது அமெரிக்கா- இஸ்ரேல், ஈரான் இடையே நடைபெற்று வரும் போா் காரணமாக எரிவாயு உருளை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மயானத்தில் தற்போது வரையில் கையிருப்பில் உள்ள உருளைகளைப் பயன்படுத்தி 10 உடல்களை மட்டுமே எரிக்கக் கூடிய நிலை இருந்து வருகிறது.

வழக்கமாக எரிவாயு மயானத்துக்கு எரிவாயு உருளை விநியோகம் செய்யக்கூடிய விநியோகஸ்தா்கள் தொடா்ந்து உருளை வழங்க முடியாது என தெரிவித்துள்ளதாகவும், தற்போது இருப்பில் உள்ள உருளைகள் காலியான உடன் உடல்களை எரிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் எரிவாயு மயான மைய நிா்வாகிகள் தெரிவித்துள்ளாா். இதனால், தட்டுப்பாடு நீங்கும் வரை எரிவாயு மயானம் முடப்படும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் கவலை அடைந்தனா்.