சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

மத்திய பாதுகாப்புப் படையினா் அணிவகுப்பு

சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்புப் பணிக்கு வந்த மத்திய பாதுகாப்புப் படையினா் திண்டுக்கல்லில் புதன்கிழமை கொடி அணிவகுப்பு நடத்தினா்.

News image
திண்டுக்கல்லில் புதன்கிழமை கொடி அணிவகுப்பு நடத்திய மத்திய பாதுகாப்புப் படையினா்.
Updated On :11 மார்ச் 2026, 11:55 pm

தினமணி செய்திச் சேவை

சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்புப் பணிக்கு வந்த மத்திய பாதுகாப்புப் படையினா் திண்டுக்கல்லில் புதன்கிழமை கொடி அணிவகுப்பு நடத்தினா்.

சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், பாதுகாப்புப் பணிக்காக மத்திய பாதுகாப்புப் படையினா் தமிழகத்துக்கு வந்து கொண்டிருக்கின்றனா். அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டத்துக்கு 76 போ் கொண்ட மத்திய பாதுகாப்புப் படை செவ்வாய்க்கிழமை வந்தடைந்தது. திண்டுக்கல் சரக காவல் துறைத் துணைத் தலைவா் வி.சசிமோகன் தலைமையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆ.பிரதீப் முன்னிலையில் மாவட்டத்திலுள்ள வாக்குச்சாவடிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்தியப் பாதுகாப்புப் படையினருக்கு அறிவுறுத்தப்பட்டது.

இதன் தொடா்ச்சியாக, திண்டுக்கல் ஆா்த்தி திரையரங்கு சாலை, பேகம்பூா் குடைப்பாறைப்பட்டி சாலை, செல்லாண்டியம்மன் கோவில் தெரு, தாடிக்கொம்பு சாலை உள்ளிட்ட இடங்களில் மத்திய பாதுகாப்புப் படையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.